Breaking
Wed. May 8th, 2024

தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஹலீம்
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு தனது அறிக்­கையை நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவிடம் சமர்ப்­பித்­ததும் அதன் பிர­திகள் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்டு அவர்­க­ளது கருத்­து­களும் ஆலோ­ச­னை­களும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப ­குழுவின் உறுப்­பி­ன­ரான அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மிடம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் தொடர்பில்
வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கை­யி­லுள்ள சிபார்­சுகள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அவ்­வ­றிக்­கையை தமது பார்­வைக்கு சமர்ப்­பிக்கும் படி நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவை முஸ்லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரி­யுள்­ளார்கள்.

தமது கருத்­து­க­ளையும் சிபார்­சு­க­ளையும் உள்­வாங்க வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­துள்­ளார்கள்.

இத­ன­டிப்­ப­டையில் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கையின் பிர­திகள் சகல முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் வழங்­கப்­படும். பல முன்­னணி முஸ்லிம் பெண்கள் அமைப்­பு­களும் சிவில் சமூக அமைப்­பு­களும் தமது ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் எம்­மிடம் சமர்ப்­பித்­துள்­ளன.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக தற்­போ­தைய அர­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப­குழு சலீம் மர்­சூபின் அறிக்­கையில் சிபார்சு செய்­யப்­பட்­டுள்ள திருத்­தங்­க­ளையும் ஏனைய அமைப்­புகள் முன்­வைத்­துள்ள திருத்­தங்­க­ளையும் கவ­னத்திற் கொண்டு இறுதி தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும். திருத்தங்கள் குர்ஆன் ஹதீஸ் மற்றும் ஷரீஆவுக்கு உட்பட்டதாகவே அமையும். உலமாக்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும். இச்சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகவுள்ளது என்றார்.

(நன்றி – VIDIVELLI)

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *