Breaking
Sun. May 19th, 2024

இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு கிறிஸ்து [ஈஸா நபி ] முன்னறிவிப்பு செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டு எடுக்கப்பட்டது.

இறுதி தூதரான முஹம்மது நபியின் வருகையை குறித்தும் ,இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம் ,தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துகளுடன் முரண்படுவதால் கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது .என்று துருக்கியின் கலாச்சார சுற்றுலா துறை அமைச்சர் உர்துக் ரூல்குனாய் தெரிவித்தார் .

இயேசு ஆரம்ப கட்டத்தில் கூறிய கட்டளைகளும் ,முன்னறிவிப்புகளும், விலங்கின் தோலில் எழுதப்பட்ட இந்நூலில் அடங்கியுள்ளன .இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் நபி அவர்களின் முன்னறிவிப்பு பற்றிய செய்தி ஆகும்.

இயேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்ட இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவெடிக்கையின் போது கண்டு பிடிக்க பட்டது .இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும் .இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பு ஆகும் .

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *