Breaking
Sun. May 5th, 2024

இலங்­கையில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தல் மற்றும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டுதல் போன்­றன தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மேற் கொண்­டு­ வரும் நட­வ­டிக்­கை­களை பாராட்­டு­வ­தா­கவும் அவை வர­வேற்­கப்­பட வேண்­டி­யவை எனவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே அமெ­ரிக்க ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் பான் கீ மூன் அரச தலை­வர்­க­ளுக்கு வழங்­கிய விருந்­து­ப­சா­ரத்தில் இரண்டு ஜனா­தி­ப­தி­களும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

இலங்­கையில் ஏற்­பட்ட மாற்­றங்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகை யில் அமைந்­துள்­ள­தாக இதன்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். மேலும் இலங்­கையில் யுத்த முடிவின் பின்னர் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­ப­தனை நான் நம்­பு­கின்றேன் என்றும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையின் வறுமை ஒழிப்பு முயற்­சி­க­ளுக்கு உத­வ­வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்த செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட் டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *