Breaking
Sun. May 19th, 2024

ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் காங்­கிரஸ் தலைவர் சோனியா காந்­தியை கைது செய்யும் தைரியம் பிர­தமர் மோடிக்கு இல்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்­ரிவால் தெரி­வித்­துள்ளார்.

ஹெலி­கொப்டர் ஊழலை முன்­வைத்து டில்லி ஜந்தர் மந்தர் பகு­தியில் சோனியா காந்­திக்கு எதி­ராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடை­பெற்­றது. இந்த போராட்­டத்தில் பங்­கேற்று கெஜ்­ரிவால் பேசி­ய­தா­வது: ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் தொடர்­பு­டைய காங்­கிரஸ் கட்­சி­யி­னரை காப்­பாற்ற பா.ஜ.க. அரசு முயற்­சிக்­கி­றது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவ­காரம் தொடர்­பாக மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு கடந்த 2 ஆண்­டு­கா­ல­மாக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் மௌனம் காத்து வரு­கி­றது.

சோனியா காந்­தியைப் பார்த்து மோடி அச்­சப்­ப­டு­கிறார். அப்­படி அச்­சப்­ப­டா­விட்டால் ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் குற்றம்சாட்டப்படும் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமருக்கு இருந்திருக்கும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *