Breaking
Sat. Apr 27th, 2024

யால தேசிய சரணாலயத்திற்குச் செல்வோருக்கும் மற்றும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரணாலயப் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார்.

அதன்படி, வாகனங்களின் வேகம், ஒலி எழுப்புதல் என்பவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. அத்துடன்,  பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கொண்டுசெல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *