Breaking
Thu. May 2nd, 2024

– எஸ்.கணேசன் –

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னர் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் என்று கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் கூறினார்.அவர் ­வ­ழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­ட்ட­தில்லை. இந்த நிலையில் இப்­பொதுத் தேர்­தலில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் இம்­முறை உங்­க­ளது கட்சி போட்­டி­யி­டு­வதால் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் போகும் நிலை ஏற்­ப­டாதா?

பதில்: -அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் போட்­டி­யிடும் அனை­வரும் முஸ்­லிம்கள். எனவே எங்­க­ளது கட்­சிக்கு விழும் ஒவ்­வொரு வாக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமையும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிடும் போது அது முஸ்லிம் பிரதி நிதித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­யாது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான முஸ்லிம் காங்­கிரஸ் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றது.

அதனால் அவர்­க­ளுக்கு முஸ்லிம் பிரதிநிதித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாது. எனவே அந்த பட்­டி­யலில் மூன்று சிங்­கள வேட்­பா­ளர்கள் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு காணப்­ப­டு­கி­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யிலும் இரு சிங்­கள சகோ­த­ரர்கள் வெற்றி பெறக் கூடிய நிலையே காணப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்தக் கூடிய ஒரே கட்சி அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸா­கவே இருக்கும். இதை வாக்­கா­ளர்கள் தெளி­வாக புரிந்து கொள்ள வேண்டும்.
முதன் முதலில் நாங்கள் தனித்து போட்­டி­யி­டு­கின்றோம். எங்­க­ளுக்கு எங்கள் வெற்றி குறித்து நம்­பிக்கை இருக்­கின்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் உத­ய­மான மாவட்டம் திகா­ம­டுல்ல மாவட்டம். அந்த மாவட்­டத்தில் நாங்கள் துணிச்­ச­லுடன் தனித்துப் போட்­டி­யி­டு­கின்றோம் என்றால் முஸ்லிம் காங்­கிரஸ் எதற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டதோ அந்த நோக்கம் மறக்­கப்­பட்டு விட்­டது. ஒரு தனி நபர் தாம் விரும்­பி­ய­வாறு இந்த கட்­சியைக் கொண்டு செல்­கின்றார்.

அவர் விரும்­பிய முடி­வு­களை எடுக்­கின்றார். அவர் எடுத்த முடி­வுகள் அத்­த­னையும் பிழைத்துப் போய்­விட்­டது. கடந்த தேர்­தலில் ரணிலை ஆத­ரித்தார். மஹிந்த வெற்றி பெற்றார்.

அதற்கு முந்­தைய தேர்­தலில் பொன்­சே­காவை ஆத­ரித்தார். மஹிந்த வெற்றி பெற்றார். இந்த தேர்­தலில் மஹிந்­த­வுடன் நின்றார். நாங்கள் தான் முதன் முதலில் மைத்­தி­ரியை ஆத­ரிக்க முடிவு செய்தோம். அதன் பின்­னர்தான் அவர் வெளியே வந்தார். அதுவும் தபால் வாக்­குகள் முடிந்­த­வு­ட­னேயே வெளியே வந்தார். இப்­ப­டிப்­பட்ட ஒரு கட்­சியும் ஒரு தலை­மையும் இருப்­பதால் எமது சமூ­கத்­துக்கு எந்­த­வொரு பிர­யோ­ச­னமும் இல்லை. இந்த மாதி­ரி­யான ஒரு கட்சி இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன?

ஒவ்­வொரு தேர்­த­லிலும் இவர் கரை­யோர மாவட்­டத்தை தாருங்கள் அல்­லது இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் எனக் கேட்­கின்றார்.

தேர்தல் காலத்தில் மட்­டும்தான் பேரம் பேசுவார். தேர்­தலின் பின்னர் ஐந்து வருட காலத்­துக்கு அல்­லது நான்கு வருட காலத்­துக்கு அமைச்­ச­ராக இருக்­கின்றார். அப்­போது அனைத்­தையும் மறந்து விடு­கின்றார்.
கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கரை­யோர மாவட்டம் பெரிய பிரச்­சி­னை­யாக இருந்­தது. மக்கள் மத்­தியில் இப்­பி­ரச்­சினை ஒரு நாட்டைக் கேட்­பது போல் பேசப்­பட்­டது.

கரை­யோர மாவட்டம் ஒரு சிறிய விடயம்.
தமிழ் மொழி மூல­மான ஒரு தனி­யான நிர்­வாக மாவட்­டமே அது. யாழ்ப்­பா­ணமும் கிளி­நொச்­சியும் ஒரே மாவட்­ட­மாக இருந்து இன்று அது இரண்டு மாவட்­ட­மாக மாறி­யுள்­ளது. வன்னி ஒரு தேர்தல் மாவட்டம். அது மூன்று மாவட்­டங்­க­ளாக மாறி­யுள்­ளது. திகா­ம­டுல்ல மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்­ட­மாக இருந்தால் அதை இரண்­டாகப் பிரிப்­பது ஒன்றும் பெரிய விட­ய­மல்ல.

இந்தப் பிரச்­சி­னையை அவர் தேர்தல் நேரத்தின் போது தூக்கிப் பிடித்து அதை பூதா­க­ர­மாக காட்­டுவார். தேர்தல் முடிந்த பின்னர் அதை மறந்து விடுவார். நாங்கள் அப்­ப­டி­யல்ல. சொன்­னதைச் செய்வோம். செய்­வதைச் சொல்வோம். செய்ய முடிந்தால் செய்வோம், ஆனால் செய்ய முடி­யா­தது என்று ஒன்­று­மில்லை.

திகா­ம­டுல்ல மாவட்ட மக்­க­ளுக்கு வேண்­டு­கோ­ளொன்றை விடுக்­கின்றேன். திகா­ம­டுல்ல மாவட்ட முஸ்லிம் மக்கள் 60000 வாக்­கு­களை எமக்குத் தந்தால் இரண்டு ஆச­னங்­களை நாங்கள் பெறலாம். இரண்டு பாரா­ளு­மன்ற பிரதிநிதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு பெற்றுத் தந்தால் எதிர்வரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமைச்சரவையை நியமிக்கும் முன்னர் நான் நிர்வாக மாவட்டத்தைப் பெற்றுக்கொடுப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு ஆசனங்களை கொடுத்துப் பார்த்தார்கள். மூன்று ஆசனங்களை கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்க வில்லை. இம்முறை நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். எமக்கு இரண்டு ஆசனங்களை முஸ்லிம் மக்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் பெற்றுத் தந்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமருவதற்கு முன்னர் திகாமடுல்ல மாவட்டத்துக்கு தனித்துவமான கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அப்படி தரவில்லை என்றால் அந்த அரசில் நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்க மாட்டேன். திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை மக்கள் பெற்றுத் தர வேண்டும். ஒரு ஆசனம் போதாது.
கேள்வி : அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு மக்கள் ஏன் வாக்­க­ளிக்க வேண்டும்?

பதில்: – அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்­பது சிறு­பான்மை மக்­களின் பாது­காப்பு அவர்­க­ளது அடிப்­படை வச­திகள் போன்ற விட­யங்­களில் அவர்­க­ளுக்கு உறு­தி­யுடன் பணி­யாற்­று­வ­தற்கு உரு­வாக்­கப்­பட்­ட­தாகும்.

குறிப்­பாக இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளுக்­காக பெருந்­த­லைவர் ஆரம்­பித்த அந்த கட்சி அவ­ரது நோக்­கங்கள் கொள்­கைகள் அத்­த­னையும் மறந்து ஒரு தனிப்­பட்ட தலை­வரின் தேவை­க­ளுக்­காக அபி­லா­ஷை­க­ளுக்­காக இன்று நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. அவ­ரது தனிப்­பட்ட தேவை­களை மைய­மாக வைத்து செயற்­ப­டு­வதால் இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் நாங்கள் கடந்த காலங்­களில் வாக்­கு­களை பயன்­ப­டுத்தி ஒரு கட்­சி­யி­னூ­டாக எதிர்­பார்த்த விட­யங்­களில் நம்­பிக்கை இழந்து இன்று இந்த வாக்­குகள் சிதறி சின்னா பின்­ன­மா­வதை நாங்கள் பார்க்­கின்றோம்.

என­வேதான் நாங்கள் இந்த நாட்டு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறோம் சிறு­பான்மை சமூ­கங்­க­ளு­டைய எல்லா உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­கா­வே ஒரு பேரம் பேசும் சக்­தி­யாக இக் கட்­சியைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ளோம். இதற்­காக மக்கள் காங்­கிரஸ் போட்­டி­யிடும் மாவட்­டங்­களில் எம்மை ஆத­ரிக்­கும்­படி மக்­களைக் கேட்டு கொள்­கின்றோம்.

கேள்வி : வன்னி மாவட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இது குறித்து தமிழ் மக்­க­ளுக்கு நீங்கள் என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்?
பதில் : அப்­ப­டி­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­போரை விட நான் தமிழ் மக்­க­ளுக்கு அதிக சேவை­களைச் செய்­துள்ளேன்.

இதை­யிட்டு மிகவும் சந்­தோ­ஷ­ம­டை­கின்றேன். மிதி­வெடி அகற்­றி­யது முதல் முல்­லைத்­தீவு மாவட்டம் மாந்தை மடு பிர­தே­சங்கள் அதே போல் முசலி போன்ற யுத்த பிர­தே­சங்­களில் மிதி வெடி­களை அகற்றி மெனிக் பாமில் தங்­கி­யி­ருந்த மக்­களை மீளக்­கு­டி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம்.

அவர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு கல் வீடு­களை கட்டிக் கொடுத்து பாட­சா­லை­களை நிர்­மா­ணித்து அரச தொழில் வாய்ப்­புக்­களை வழங்கி விவ­சாயம் செய்­வ­தற்கு வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்ளேன்.
நான் செய்த நல்ல பணி­களை தமிழ் மக்கள் அறி­வார்கள்.

எந்­த­வொரு அர­சியல் எதிர்­பார்ப்­பு­மில்­லாமல் மனி­தா­பி­மா­னத்­துடன் அந்தப் பணி­களை மன்னார் வவு­னியா முல்­லைத்­தீவு மாவட்ட அபி­வி­ருத்திக் குழுத் தலை­வ­ராக இருந்து கொண்டு கடந்த காலங்­களில் மேற்­கொண்­டுள்ளேன். என் மீது குற்றம் சாட்டும் கட்­சிகள் இது போன்ற எந்­த­வொரு பணி­யையும் செய்­த­தில்லை. மாகாண சபை அதி­கா­ரங்­களை வைத்துக் கொண்டும் நான் செய்­ததில் பத்து சத வீதத்­தைக்­கூட செய்­த­தில்லை. அநி­யா­ய­மாக என்னை முஸ்லிம் மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே பணி செய்­வ­தா­கவும் தமிழ் மக்­க­ளுக்கு பணி புரி­ய­வில்லை என்­பது என் மீது கொண்ட தாழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மான முன் வைக்­கப்­படும் விமர்­ச­ன­மாகும்.

யுத்­தத்தில் தமி­ழர்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள் முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள். முஸ்­லிம்கள் 30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டார்கள். தமி­ழர்கள் 3-4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் துரத்­தப்­பட்­டார்கள். முதலில் தமி­ழர்­களை மீள் குடி­ய­மர்த்தி அவர்­க­ளுக்­கான வச­தி­களை செய்து கொடுத்து விட்டு இரண்­டா­வ­தாக முஸ்லிம் மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வி­ருந்தோம்.

எல்­லோரும் வாழ வேண்டும். ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் மற்ற இனம் வாழக்­கூ­டாது என்று நினைப்­பது நியா­ய­மல்ல. எனவே அந்த மாவட்­டத்­துக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளாக வாழ்ந்­த­வர்கள் யுத்த காலத்தில் வெளி­யே­றி­ய­வர்கள் அல்­லது பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­வர்கள்.

வாழ விரும்பி மீள் வரத்­த­யா­ராகும் போது அதற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு எதைச் செய்­தோமோ முஸ்லிம் மக்­க­ளுக்கும் அதையே செய்ய முற்­பட்டோம். முஸ்லிம் மக்­களை இன்னும் முறை­யாக மீள்­கு­டி­ய­மர்த்த முடி­ய­வில்லை. பாது­காப்பு வல­யத்தை தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­களில் தமிழ் மக்கள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்டு விட்­டனர்.
நன்றி வீரகேசரி வாரவெளியீ (26-07-2015)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *