Breaking
Thu. May 2nd, 2024

அஸ்ரப் ஏ சமத்

நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான ரவி கருநாயக்க – இன்று கொழும்பு 7 ரொஸ்மிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைனின் வீட்டுக்கு இப்தாா் நிகழ்வுக்கு கலந்து கொள்வதாக அறிவித்திருந்தாா். அதற்காக அஸ்ரப் ஹூசைனின் ஊடகவியலாளா்கள் புத்திஜீவிகள் 50 பேரை அழைத்திருந்தாா். ஆனால் அமைச்சா் சரியாக தாமதித்து 7 மணிக்கே வந்து சோ்ந்தாா்.

என்னை மன்னித்துவிடுங்கள் சரியாக 5-7 மணிவரை அலரி மாளிகையில் ரணில் தலைமையில் – ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டிடயிருந்த சிலா் ஜ.தே.கட்சி ஊடாக தோ்தலில் குதிக்க உள்ளனா். அதுபற்றி விசேட கூட்டம் நடைபெற்றது. அதற்காகவே உடன் தங்களது இப்தாாருக்கு வரமுடியவில்லை. இப்தாரை ஏற்பாடு செய்த அஸ்ரப் ஹூசையினிடம் ரவி தெரிவித்தாா்.
ராஜித்த, பாட்டலிசம்பிக்க, எஸ்.பி திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, ஹிருனிக்கா, அர்ஜூன ரணதுங்க போன்றதொரு பலமான அணியொன்று ஜ.தே. கட்சியில் தோ்தலில் குதிக்க உள்ளது. இவ்விடயம் பற்றியே கலந்துரையாடினோம். ஜக்கிய தேசிய முன்னனி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் ஊடக ஒரு முன்னனி அமைப்பது அவா்களுக்கு ஜ.தே.கட்சி ஆசனம், தேிசய பட்டியல் பற்றி கலந்து ரையாடினோம்.

முன்னாள் ஜனாதிபதி தோ்தலுக்காக உழைத்த அனைவரும் மீள ஜ. தே.கட்சி பக்கம், அத்துடன் முஸ்லீம், மலைய தமிழ், வட கிழக்கு தமிழ் கட்சிகலெல்லாம் ஜ.தே.கட்சியில் இருப்பதால் அவா்களுக்கு மீள ஜ.தே.கட்சியே வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. அதற்காகவே மீள அலை அலையாக ஜ..தே.கட்சியில் போட்டியிட முன்வருவதாக அமைச்சா் ரவி கருணாநாயக்க தெரிவித்தாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *