Breaking
Mon. Apr 29th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வாதுவை, மோதரமுல்லை பிரதேசத்தில் லங்கா சதொச கிளை இன்று வியாழன் (04) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ லக்ஷ்மன் விஜேமான மற்றும் கெளரவ அதிதிகளாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், களுத்துறை நகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களுத்துறை தொகுதி அமைப்பாளருமான ஹிஸாம் சுஹைல், மற்றும் விசேட அதிதியாக வாத்துவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post