Breaking
Mon. May 6th, 2024

ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வி­ருந்த பெறு­மதி சேர் வரி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் கல்­யாணி தஹ­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த வரி அதி­க­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்ள விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, மறு அறி­வித்தல் வரை முன்னர் இருந்­தது போன்று 11 சதவீத­மான பெறு­மதி சேர் வரியே நடை­மு­றையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீத­மாக வரியை அறி­விடக் கூடாது என்றும் தெரி­வித்­துள்ளார். பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் அண்­மையில் பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பெறு­மதி சேர் வரியை 15 சதவீத­மாக அதி­க­ரிப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தமை தெரிந்­ததே இதற்கு தொழி­லாளர், மற்றும் தொழிற்­சங்­கங்­க­ளி­ட­மி­ருந்தும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரிட மிரும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *