Breaking
Fri. May 3rd, 2024
வவுனியா மாவட்டத்துக்கு இன்று (17) விஜயம் செய்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புதுக்குளம், ஆண்டியாபுளியங்குளம், வாழவைத்த குளம், முதலியார் குளம், ஆனைவிழுந்தான், சிப்பிக்குளம் மற்றும் மாங்குளம் உள்ளிட்ட பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
மேற்படி மக்கள் சந்திப்புகளின் போது, பொதுமக்கள், ஆதரவாளர்கள், கட்சியின்  முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், தலைவர் ரிஷாட் பதியுதீனைக் காண ஆவலுடன் வருகை தந்திருந்தனர்.
 
இதேவேளை, கடந்த 06 மாதகால சிறைப்படுத்தலின் போது, தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 

Related Post