Breaking
Fri. May 17th, 2024
மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி, நேற்று முன்தினம் இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது.
இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
எதுஎவ்வாறு இருப்பினும், தான் போதையில் வாகனம் செலுத்தவில்லை என, விஜித்த ஹேரத் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்று -01- கொழும்பு மோட்டார் வாகன நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து அவரை நீதிபதி விடுவித்தார்.
எனினும் ஏனைய இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் 1500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *