Breaking
Thu. May 16th, 2024

நாடு­பூ­ரா­கவும் நேற்று முன்­தினம் ஏற்பட்ட மின்­சார தடைக்கு பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்­சா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இருப்­பினும் அதி­காலை 3.30 க்கும் 4.00மணிக்கும் இடையில் நிலைமை வழ­மைக்கு திரும்­பி­ய­தாக இலங்கை மின்­சா­ர­சபை தலைவர் அனுர விஜே­பால குறிப்­பிட்டார்.
இது­ தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
நேற்­று­முன்­தினம் இரவு 11.30 மணி­ய­ளவில் நாடு­பூ­ரா­கவும் திடீ­ரென மின்­சாரம் தடைப்­பட்­டது.பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழி­ல்நுட்­பக்­கோ­ளாறே இதற்­கான பிர­தான கார­ண­மாகும். என்­றாலும் சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் மின்­வி­நி­யோ­கத்தை மீண்டும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தோம். அத­ன­டிப்­ப­டையில் 3.30க்கும் 4மணிக்கும் இடையில் நாடு­பூ­ரா­கவும் மின்­வி­நி­யோகம் வழ­மைக்கு திரும்­பி­யது.

இவ்­வாறு மின்­வி­நி­யோகம் தடைப்­பட தொழில்­நுட்ப கோளாறு ஏற்­படக் காரணம் என்ன என்­பதை கண்­ட­றி­வ­தற்­காக விசேட விசா­ரணை ஒன்றை ஆரம்­பித்­துள்­ள­துடன் இதன்­மூலம் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டு­வதை தடுத்­துக்­கொள்­வ­தற்கு முடி­யு­மென நம்­பு­கின்றேன்.

எவ்­வா­றா­யினும் இதன்­கா­ர­ண­மாக பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரியம் தொடர்பில் கவ­லை­ய­டை­கின்றேன் என்றார்.

இது­தொ­டர்பில் மின்­வலு மற்றும் வலு­சக்தி அமைச்சின் செய­லாளர் கலா­நிதி சுரேன் பட்­ட­கொட தெரி­விக்­கையில்,

குறைந்­த­ள­வான கேள்வி காணப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் கட்­ட­மைப்­பிற்கு அதி­க­ள­வான மின்­சாரம் கிடைத்­த­மையே நாடு­பூ­ரா­கவும் மின்­சாரம் தடைப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாகும்.
நேற்­று­முன்­தினம் இரவு 10 மணி­ய­ளவில் குறைந்­த­ள­வி­லான கேள்­வியே நில­வி­யது. என்­றாலும் மின்­வி­நி­யோக கட்­ட­மைப்­பிற்கு அதி­க­ளவில் மின்­சாரம் கிடைத்­தது. இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *