Breaking
Wed. May 1st, 2024

வில்­பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அப­க­ரிப்­ப­தற்­கா­க­வாகும்.

இது ஜனா­தி­ப­தியின் தவ­றான முடி­வாகும். ஞான­சார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இன­வா­தி­க­ளுடன் இணைந்து ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் இச்­செயல் திட்­ட­மிட்ட சதி­யாகும்.

ஜனா­தி­பதி தனது பிழை­யான முடி­வினை மாற்­றிக்­கொள்­ளா­விட்டால் முஸ்­லிம்கள் சார்பில் ஐக்­கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்­ப­தற்கு தயா­ராக இருக்­கிறேன் என கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சரும், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வில்­பத்து வன பிர­தே­சத்தை விரி­வு­ப­டுத்தி அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்கும் படி ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை தொடர்பில் வின­விய போதே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் தொடர்தும் கருத்துத் தெரி­விக்­கையில், நாட்டின் நல­னுக்­கா­கவும் பாது­காப்­பிற்­கா­கவும் பங்­க­ளிப்­புச்­செய்த முஸ்­லிம்­களின் இலட்­சக்­க­ணக்­கான ஏக்கர் காணி­க­ளுக்கு ஜனா­தி­பதி துரோகம் செய்ய எத்­த­னித்­துள்­ளமை மக்­களை கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது.

நாட்டின் தலை­வ­ராக, ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சி­யி­ல­மர்த்த பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­களை அவர் கறி­வேப்­பி­லை­யாக கரு­தி­யி­ருக்­கின்றார்.

மறிச்­சுக்­கட்டி பிர­தேசம் வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மா­ன­தென 2012 ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யிட்­டுள்­ளமை முறை­யான விதி­களைப் பேணாது மேற்­கொள்­ளப்­பட்­ட­மையே  பிரச்­சி­னைக்­கு­ரிய கார­ண­மாகும். யுத்­தத்­தினால் வெளி­யேற்­றப்­பட்ட மக்­களின் காணிகள் அவர்­க­ளுக்கே தெரி­யாது, அறி­விக்­கப்­ப­டாது, வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­தினால் கையேற்­கப்­பட்டு, வேலி அமைக்­கப்­பட்டு, அறி­வித்தல் பல­கையும் இடப்­பட்­டுள்­ளது.

இக்­காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு 2015 ஆம் ஆண்­டிலே தமது காணி கையேற்­கப்­பட்­டுள்­ளமை அறியக் கிடைத்­துள்­ளது. இது இம்­மக்­க­ளுக்குச் செய்­யப்­பட்ட பாரிய துரோ­க­மாகும்.

மக்கள் அக­தி­க­ளாக தமது காணி­க­ளி­லி­ருந்தும் வெளி­யே­றி­யி­ருக்­கும்­போது யாருக்கும் தெரி­யாது வன­ப­ரி­பா­லன திணைக்­களம் கையேற்­றுள்­ளது.

முசலி பிர­தே­ச­சபை எல்­லைக்­குட்­பட்ட மறிச்­சுக்­கட்டி பிர­தேச கால்­நடை வளர்ப்பு, விவ­சாயம் என்­ப­வற்­றுக்கு உட்­பட்­டி­ருந்த இப்­பி­ர­தே­சத்தை வன­ஜீ­வ­ரா­சிகள் வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது பிழை­யான முடி­வாகும். ஜனா­தி­ப­தியின் கூற்­றுப்­படி மறிச்­சுக்­கட்டி, கர­டிக்­குளி, பாலக்­குழி, கொண்­டச்சி, முள்­ளிக்­குளம் பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­க­வுள்­ளனர்.

அளக்­கட்டு பிர­தே­சத்தில் சில வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. மேலும் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது இப்­ப­கு­தியும் பிரச்­சி­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வீடுகள் அனைத்தும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உத­வி­யு­ட­னேயே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

நான் சட்­ட­வி­ரோ­த­மாக காணி­களை வழங்­கி­யுள்­ள­தாக என் மீது அபாண்­ட­மாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. நான் எவ­ருக்கும் ½ ஏக்­க­ருக்கு கூடு­த­லான காணிகள் வழங்­க­வில்லை.

இதே­வேளை 1938 ஆம் ஆண்டு வன ­ப­ரிபா­லன திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மா­ன­தென வர்த்­த­மானி அறி­வித்தல் செய்­யப்­பட்ட கலா­போ­கஸ்­வெவ எனும் பிர­தேச காணி­களே காணிக் கச்சேரி நடத்­தப்­ப­டாது எவ்­வித சட்ட ஏற்­பா­டு­க­ளு­மின்றி தென் இலங்கை சிங்­கள மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இங்கு 5000 குடும்­பங்­க­ளுக்கு ஒரு குடும்­பத்­துக்கு ஒரு ஏக்கர் வீதம் காணி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது திட்­ட­மிட்ட குடி­யேற்­ற­மாகும். அங்கு இரா­ணு­வத்­தினர் கூட காட­ழிப்­பு­களைச் செய்து மரங்­களை வெட்­டி­யுள்­ளனர்.

வட­மா­கா­ணத்தில் சுமார் 40 பிர­தேச செய­ல­கங்­களில் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வி­லேயே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர். எனவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சதித் திட்­ட­மா­கவே நாங்கள் இதைக் கரு­து­கிறோம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரையும் அமைச்­சர்­க­ளையும் சந்­தித்து இது தொடர்பில் நியாயம் கோர­வுள்ளேன். நியா­யத்தின் பக்­க­முள்ள சிங்­களத் தலை­வர்­க­ளையும் இணைத்துக் கொள்­ள­வுள்ளேன்.

எமக்கு எதிலும் நியாயம் கிடைக்­கா­விட்டால் முஸ்­லிம்கள் சார்பில் ஐ.நா. விடம் நீதி கோர­வுள்ளேன்.

இதற்­காக சிவில் அமைப்­பு­களின் ஒத்­து­ழைப்­பு­களை வேண்டி நிற்­கிறேன்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் எமக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை ஜனாதிபதி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.

முஸ்லிம்கள் ஒரு அங்குல நிலத்தைக் கூட அபகரிக்கவில்லை. ஒரு அங்குல நிலத்தில் கூட சட்டவிரோதமாகக் குடியேறவில்லை. ஜனாதிபதி எமக்கு துரோகம் செய்யமாட்டார் என்றிருந்த முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *