Breaking
Fri. May 3rd, 2024

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர்.

பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாகப் பிர­சாரம் செய்­கி­றார்காள். இதன் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பே செயற்­ப­டு­கி­றது என தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

சிவில் அமைப்­பு­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் கலந்து கொண்ட வில்­பத்து விவ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு ரமடா ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்த­தா­வது;
இன்று வில்­பத்து விவ­காரம் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் தவ­றாகப் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. முஸ்­லிம்கள் வில்­பத்து தேசிய வனத்தை அழிக்­கி­றார்கள்.

மரங்­களை வெட்­டு­கி­றார்கள், மிரு­கங்­களைக் கொல்­கி­றார்கள் என்­றெல்லாம் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. இவை அனைத்தும் பொய்ப் பிர­சா­ர­மாகும்.

முஸ்­லிம்கள் தமது பூர்­வீகக் காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து மீள் குடி­யே­றி­யி­ருக்­கி­றார்கள். நாட்டின் தேசிய சொத்­தான வனத்தை அழிக்க வேண்­டிய தேவை முஸ்­லிம்­க­ளுக்கு இல்லை. இந்த உண்மை நிலையை அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கு குறிப்­பாக பெரும்­பான்மை மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

வில்­பத்து விவ­கா­ரத்தை பின்­னா­லி­ருந்து இயக்கி பொது­ப­ல­சேனா அமைப்பு சுய இலாபம் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கி­றது. இவ்­வா­றான முயற்­சி­க­ளினால் நாட்டில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

கடந்த கால அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே பெரு­ம­ளவு காடுகள் அர­சியல் லாபத்­துக்­காக அழிக்­கப்­பட்­டன. கலா­போ­கஸ்­வெவ பகு­தியில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காடுகள் அழிக்­கப்­பட்டு அவ்­வி­டங்­களில் தென்­னி­லங்கை மக்­களை அழைத்து வந்து குடி­யேற்­றி­னார்கள். அக் குடி­யேற்­றத்­துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக் ஷவின் பெயரே சூட்­டப்­பட்­டது.

அக் குடி­யேற்றம் ‘நாமல்­கம’ என அழைக்­கப்­பட்­டது. சுமார் 5000 குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டன. அக்­கா­லத்தில் இன்­றுள்ள சூழ­லி­ய­லா­ளர்கள் பெரி­தாகக் கோஷ­மெ­ழுப்­ப­வில்லை.

இன்றும் அக் குடியேற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வில்பத்து பகுதியில் தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக குரல் எழுப்பப்படுகிறது. இது இனவாத செயலாகும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *