Breaking
Sun. Apr 28th, 2024

களுத்துறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் இயங்கும், விஸ்டம் சர்வதேசப் பாடசாலை, பேருவளை சீனங்கோட்டை கிளையின் வாசிகசாலை மற்றும் கணணிக்கூடம் திறப்பு விழா இன்று (18) திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், கெளரவ அதிதியாக பேருவளை நகர சபை உறுப்பினர் ஜனாப் தில்ஷாத் அன்வர், விஸ்டம் சர்வதேச பாடசாலை தலைவர் அஷ்ஷெய்க் பெளஸர் (நளீமி), அதிபர் ஷகீல் இஸ்மத், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Post