பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தூக்கி எறியப்படுவதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீங்களாக வெளியேறி விடுங்கள்’’ என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஆளும் அரசிலிருந்து மதிமுக கட்சி விலக வேண்டும் என கட்சித் தொண்டர்கள் எற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது