Breaking
Tue. May 14th, 2024

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்­சியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த தினேஷ் கு­ண­வர்­தன எம்.பி,

இன்­றி­லி­ருந்து பதி­ன்நான்கு நாட்­க­ளுக் குள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட வேண்டும் அவ்­வாறு அறி­விக்­காத பட்­சத்தில் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வின் போது தேர்தல் திகதி தொடர்பில் கேள்வி எழுப்­புவோம்.

கடந்த ஜன­வரி எட்டாம் திகதி தேர்தல் வெற்­றியின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய முத­லா­வது உரையில் தேர்தல் திக­தியை காலம் தாழ்த்­தவே மாட்டோம் என்று சூளு­ரைத்­தி­ருந்தார்.

அதற்­க­மைய இன்­றுடன் சகல உள்­ளூ­ரா ட்சி மன்­றங்­க­ளி­னதும் நீடிக்­கப்­பட்­டி­ருந்த கால வரை­யறை முற்­று­ப்பெ­று­கின்­றது. எனவே எதிர்­வரும் தேர்­த­லுக்­கான திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட வேண் டும்.

மாறாக சட்­டத்தை ஜனாதிபதியினதும் பிரதமரினதும் வீட்டுச் சொத்துப்போல் தாம் நினைக்கும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணவேண்டாம் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *