நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக 5 இலட்சத்து 78,135 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.இவர்களில் 3 இலட்சத்து 70,030 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.பரீட்சை நிலையங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்களின் முதற் கட்ட நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.