Breaking
Sat. Apr 27th, 2024

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கை யயான்றில் ஐ.நாவின் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் d ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப் பிட்டுள்ளார்.
தன்னுடைய அலுவலகம் முன் னைய ஆணையாளர் நவநீதம்பிள் ளையின் கீழ் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையி லேயே அவர் இதனைக் குறிப்பிட் டுள்ளார்.

குறிப்பிட்ட காலப் பகுதியில் ஆணைக் குழு மூன்று நாடுகள் குறித்து விசா ரணைகளை முன்னெடுத்துள்ளது. சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகியனவே இந்த நாடுகள்.
இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விசேட குழுக்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பலஸ்தீனம், எரித்தி ரியா மற்றும் ஈராக் குறித்தும் விசார ணைகள் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் நான் பதவியேற்ற போது, பெரும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஐ.நா வின் முக்கிய தூண்களில் ஒன்றான மனித உரிமைக்கு தற்போது மிக குறைந்தளவு வளங்களே கிடைக்கின்றன. ஏனைய துறைகளுக்கு வழங்கப் படுவதை விட குறைவாகவே மனித உரிமைகளுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடரமுடியாது.

மனித உரிமை கள் மீறப்படும்போது துஷ்பிரயோகங்க ளும், மீறல்களும் பாரிய மோதல்களை உருவாக்கும் போது, சகலவகைகளி லும் இழப்புகள் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன என்று தெரிவித் துள்ள அவர், மனித உரிமை மீறல் களை கண்டுபிடித்து எச்சரிப்பதற்கான தனது அமைப்பின் திறனை அதிகரிக் குமாறும், ஆபத்தான சமிக்ஞைகள் வெளியானவுடன் உடனடி நடவடிக் கைகளை எடுக்குமாறும் கோரியுள் ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *