Breaking
Sat. Dec 6th, 2025

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பும் போது, திடீரென தீப்பற்றியது. இதன்போது, அங்கு நின்றவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்துள்ளனர்.

சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Post