(க.கிஷாந்தன்)
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே ரயில் கலபொட மற்றும் ஹிங்குருஓயா இடையிலான பகுதியில் தடம்புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.ரயில் போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. (VK)