Breaking
Tue. May 21st, 2024

பழுலுல்லாஹ் பர்ஹான்

கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் நேற்று (17) வெள்ளிக்கிழமை கத்தார் பின் லஹ்தான் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓன்றியத்தின் செயலாளர் மௌலவி முகைதீன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ‘நிருவாக மீள் கட்டமைப்பு எனும் தலைப்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் இடம்பெற்று பின்னர் பின்வரும் விதமாக நிர்வாகம் மீள கட்டமைக்கப்பட்டது.

ஓன்றியத் தலைவராக மௌலவி எம்.எம்.எம்.உவைஸ் (பலாஹி), உப தலைவராக மௌலவி எம்.ஐ.எம்.சுஜாஹ் (பலாஹி), பிரதித் தலைவராக மௌலவி எம்.ஏ.எம்.புர்ஹான் (பலாஹி), பொதுச் செயலாளராக மௌலவி எம்.பி.எம். அஸ்பர்(பலாஹி), உப செயலாளராக மௌலவி எஸ்.ஏ.எம்.சிஹான்(பலாஹி), பொருளாளராக மௌலவி கே.எல்.எம்.இமாமுத்தீன்(பலாஹி), உதவிப்பொருளாளராக மௌலவி எம்.எம்.சிஹாபுத்தீன் (பலாஹி), கணக்காய்வாளராக மௌலவி ஈ.எல்.எம்.நியாஸ்(பலாஹி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த 2013.11.01முதல் ஓர் அமைப்பாக இயங்கி வரும் குறித்த ஒன்றியம் எதிர்காலத்தில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *