Breaking
Mon. May 6th, 2024

ஈராக்கில் 124 தடவை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. இதனால் ISISகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்தீஷ் படைகள் பல பகுதிகளை மீண்டும் மீட்டுள்ளனர். மொசூல் அணையும் ISIS களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்பகுதி முழுவதையும் மீட்க அமெரிக்க போர் விமானங்கள் ISISகள் மீது நேற்று குண்டு மழை பொழிந்தன. அதில், ISISகளின் 16 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. பல வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த தகவலை அமெரிக்காவின் மத்திய கமாண்டர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *