Headlines

நெசவுத் துறையில் தொழில் இழந்தோருக்கு நஷ்டயீடு வழங்கப்பட்டது

1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் தனியார் துறையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நெசவு கைத்தொழில் துறையில் பணியாற்ற முடியாமல் வேலையிழந்தவர்களுக்கு நஷடயீட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 1960-70 ஆம் ஆண்டு காலப்பகுதி இத்துறையின் மிகவும் முக்கியத்துமிக்கதாகும்.அதன் ஆட்சிக்கு வந்த அரசு மேற்கொண்ட நடை முறையினால் இத்துறையானது பின்னடைவை சந்திக்க நேரிட்டது. அதனால் அத்துறையில் பணியாற்றிய ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது.அன்றைய அரசு தமது கட்டுப்பாட்டில் இருந்த இத்திணைக்களத்தினை தனியார் துறைக்கு வழங்கியதால்,10 வருடங்களுக்கு மேலாக  பணியாற்றி ஊழியர்கள்…

Read More

வவுனியாவில் இன துவேசிகளுக்கு எதிராக பாரிய ஆரப்பாட்டம்

வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம்,சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவைில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாகவும்,அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்வெள்ளிக்கிழமை பாரிய  பேரணியொன்று இடம் பெற்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.வவுனியா பசார் வீதியிலிருந்தும்,வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகள் ஆரம்பமானதுடன் இவ்விரு பேரணிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையினை வந்தடைந்தன. பேரணியில்…

Read More

மின்சாரம் வழங்கியமைக்கு நன்றி-மக்கள் கடிதம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள பூவரசன்குளம் மணியார் குளம் 50 வீட்டுத்திட்டத்திற்கு மின்சாரம் பெற்றுத் தந்தமைக்கு அப்பிரதேச மக்கள் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.கணகலிங்கம் தலைமையிலான செயலாளர் மகேந்திர ராசா,பொருளாலர் இ.விஜயகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – நீண்ட காலமாக இருளில் இருந்த எம்மை வெளிச்சத்தின் பால் கொண்டுவரும் வகையில் எமது கிராமத்திற்கு…

Read More

திவி நெகும திட்டத்தின் மூலம் வடமாகாணமே அதிக நன்மையடையும்-ஹூனைஸ் எம்.பி

திவிநெகும தேசிய திட்டத்தின் மூலம் அதிகமான நன்மையினை வடமாகாணமே அடையப் போகின்றது.இவ்வாறு நன்மையடையும் போது எமது பிரதேசங்களும் பல் துறைகளிலும் அபிவிருத்திகானும் என்பதை உறுதியாக கூறுகின்றேன் என்று மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இன்று கூறினார். மடு பிரதேச செயலகப் பிரிவில் வறுமையற்ற இலங்கையினை ஏற்படுத்தும் தேசிய திட்டத்தினை மக்கள் மத்தியில் அறிமுகம செய்து வைக்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர்…

Read More

சர்வதேச குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மாணவனுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராட்டு

சவூதி அரேபியாவில் இடம் பெற்ற சர்வதேச கிராத் போட்டியில் வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமையும்,முஸ்லிம் சமூகத்திற்கு கௌரவத்தையும் பெற்றுத் தந்த கொழும்பைச் சேர்ந்த அல்-ஹாபிஸ் முஹம்மத் றிஸ்தி முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழ்த்துக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழத்தினை தெரிவித்துள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள…

Read More

அடாவடித்தனத்தின் மூலம் எதையும் பெற முடியாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காட்டம்

வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை புரந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றும் கூறினார். வன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(2012.12.16) இடம் பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.   வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,…

Read More

மனித உரிமை அமைப்பின் 4வது ஆண்டு விழா கொழும்பில் இடம் பெற்றுள்ளது

மனித உரிமை அமைப்பின் 4 வது ஆண்டு நிறைவு விழா கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றுள்ளது. அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,அதன் அங்கத்துவத்துவ அடையாள அட்டையினை பெற்றுக் கொண்டுள்ளார்.அதேவேளை பிரதமரின் இணைப்புச் செயலாளர் எஸ்.டி.தர்மசேன பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை இதன் போது வழங்கினார்.

Read More

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் கண்டனம்

இன்று சர்வதேச முஸ்லிம் சமூகம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறை மற்றும் மனித உணர்வுகளுக்கு அப்பாலான தாக்குதல் சம்பவங்களை தாம் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன்,இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச வல்லரசு நாடுகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன புனித பூமியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில்,அப்பாவி மக்களையும்,குழந்தைகளையும் இலக்கு வைத்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அப்பட்டமான சர்வதேச மனித உரிமை…

Read More

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரண்கின்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.தற்போது வடக்கு,கிழக்கு சமாதான சூழல் குறித்து அமைச்சர றிசாத் பதியுதீன் உயர் ஸ்தானிகரிடம் எடுத்துரைத்ததுடன்,பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வாய்ப்புக்கள் ஒள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார். தாம் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் முதலாவது தங்களை சந்தித்துள்ளதாகவும்,எதிர் காலத்திலும் இரு நாடுகளுக்குமான் வர்த்தக உறவுகள் குறித்து தொடர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்ததுடன்,தாம் வடக்கிற்கு…

Read More

மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக ஹூனைஸ் நியமனம்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்,மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவின் ஏனைய ஆலோஷகர்களாக பிரதமர் தி.மு.ஜயரத்ன. பாதுகாப்பு செயலாளரின் இணைப்பு செயலாளர் லெஸ்லி குணவர்தன ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.  பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்குக்கான நியமனக் கடிதத்தை மனித உரிமை அமைப்பின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் வழங்கி வைத்தார். மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் தம்பட்டை முதலியார் கட்டு கிராமத்தை பிறப்பிடமாக…

Read More

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணியினை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்-உலமா சபை

வவுனியா  மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்களுக்கான கூட்டமொன்று இன்று வவுனியா இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி சபை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீரடமானங்களை வ்வுனியா மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும செயலளார் ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவ்வறிக்கையின் விபரங்கள் வருமாறு –  ( 1 ) வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என மூவின மக்களும் புரிந்துணர்வுடனும்,ஒற்றுமையுடனும் வாழ்ந்து வரும் இத்தருனத்தில் அதை சீர்குலைக்க …

Read More