Headlines

கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றிற்கு வருகை!

கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போழுது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத் தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

படுகுழியில் விழப்போகும் மஹிந்த

-M.I.முபாறக் – அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்ற விசாரணை போன்ற தேசிய பிரச்சினைகளை விடவும் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியாக இருப்பது மஹிந்த தரப்பின் கூத்துத்தான். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுதல் அல்லது அக்கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்ற நோக்கில் அவர்கள் செயற்படுவதே இதற்கு காரணம். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுவது முடியாத காரியம் என்றாலும் புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்பது சாத்தியமே.அவ்வாறு புதிய கட்சி ஒன்று உருவாகும்போது…

Read More

கட்சிகளை உடைப்பது ராஜபக்சக்களுக்கு பொழுதுபோக்கு – சந்திரிக்கா

கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் வெயாங்கொடவில் நேற்று (26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோது சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவடையச் செய்வது சிலரின் பொழுது போக்காக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் கல்வித்துறைக்காக பாரியளவில் சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவை மீண்டும் வீழ்த்திய மைத்திரி!

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேஸ்புக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பாரிய போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் வரை பிரதான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதிக்கம் செலுத்திய மஹிந்தவை பின்தள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையில் அதிகமான மக்கள் விரும்பம் வெளியிட்டுள்ள…

Read More

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவை கைது செய்யுமாறு…

Read More

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல

-எம்.ஐ.முபாறக் – இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல் அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர். யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டமையும்-காணாமல் ஆக்கப்பட்டமையும்- கொல்லப்பட்டமையும்-இடம்பெயர்க்கச் செய்யப்பட்டமையும் நீண்ட வரலாறாக இருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும் நீதி தேடி இன்று தமிழர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டு நீதியை அடையும் கட்டத்தை எட்டியுள்ளன. பிரச்சினைகள் சர்வதேசமயமாக்கப்பட்டமையும் இராஜதந்திர நகர்வுமே இந்த சாதகத் தன்மைக்கு காரணம்….

Read More

நாடு திரும்பினார் மஹிந்த!

மலேசியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று காலை 10.30 மணிக்கு மலேசியா விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 319 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் மலேசியா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த கவலை!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு நெருக்கமான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ நியமித்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மகிந்த நீக்கியுள்ளார். இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக…

Read More

மஹிந்தவிற்கு வயதாகிவிட்டது – அமைச்சர் ராஜித

70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை…

Read More

சுதந்திரம் பறிபோய்விட்டது – மஹிந்த

நாட்டுக்குள் நிலைகொண்டிருந்த சுதந்திரம், படிப்படியாக வரையறுக்கப்பட்டு வருகின்றது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். திம்புலாகல தேரர் தொடர்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்றத்துக்குள்ளும், சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், பெயர் மற்றும் ஊர்கள் குறிப்பிடப்பட்டு, நேரடியாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் அழைக்கப்பட்டு, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிட்டார். அத்துடன், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையே, நல்லாட்சி அரசாங்கம் திறந்து வைத்து வருகின்றது…

Read More

மஹிந்தவின் பின்னால் சென்று பயனில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்குஎதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

Read More

மஹிந்தவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு எனக்கு தொலைபேசி அழைப்­பு வருது

கிழக்கில் வலு­வான முஸ்லிம் சக்தி உரு­வெ­டுத்து வரு­வ­தாக தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு தினமும் தொலைபேசி அழைப்­புகள் வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் சிறு வியா­பா­ரி­களின் வர்த்­தக நிலை­யங்­களை அகற்றும் திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பொர­ளையில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் பாரா­ளு­மன்ற…

Read More