Home Blog Page 1140

அமைச்சர் றிசாத் பதியுதீன் இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவராவார்

0
அமைச்சர் றிசாத் பதியுதீன் இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவராவார்.அவரினால் வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கனை இன்று சகல சமூகங்களும் அனுபவித்துவருகின்றனர்.எதையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது இயலாத் தன்மையினை மறைப்பதற்காக வேண்டி அமைச்சர் றிசாத் மீது இனவாத சாயத்தை பூசுகின்றனர் என்று மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களை குடியேற்றவிடாமல் தடுக்கும் செயலை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலம் அவர் அதில் குறிப்பிட்டுள்ளாவது-
வன்னியில் வாழ்ந்த முஸ்லிம்களை அன்று வெளியேற்றியவர்கள் இன்றும் அதே பாணியில் செயற்படுகின்றனர்.
தமிழ்-முஸ்லிம் உறவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை.இந்த உறவுகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவது அவர்களின் இலட்சியமாகும்.
ஒரு தமிழன் என்ற வகையில் நாம் மிகவும் கவலையடைகின்றேன்.முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இங்கு அவர்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுப்பது தான் முறையாகும்.அரச அதிகாரிகள் அதனை பெற்றுக்கொடுக்கவருகின்ற போது நாங்கள் அதற்கு ஒத்தாசையாகத் தான் இருக்க வேண்டுமே தவிர அதனை தடுக்கும் சமூகமாக இருந்துவிடக் கூடாது,
கடந்த கால யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை,முஸ்லிம்களும் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.எமது மாவட்ட மக்கள் அது முஸ்லிம்களாக இருந்தால் என்ன தமிழ் மக்களாக இருந்தாலென்ன அவர்கள் எம்மை போன்ற உணர்வுகளும்,தேவைகளும் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டும்.அதனை செய்ய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடுக்கின்றனர்.
முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற விடாமல் தடுத்தால் எமது பிரதேசமான நட்டான்கண்டலில் முஸ்லிம்களை குடியேற்றுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.எமது மக்கள் இந்த முஸ்லிம் சகோதரர்களை வரவேற்பதற்கு தயாராக இருக்கின்றனர் என்றும் கூறினார்.

பொதுபல சேனாவுக்கு ஹெல உறுமய ஆதரவு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு

0
இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார்ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்

இதேவேளை, பொது பல சேனாவின் விழாவொன்றில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கலந்துகொண்டிருந்தார்.
அந்த நிகழ்வில் அவர் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று முஸ்லிம் அமைச்சர்கள் முன்கூட்டியே கேட்டுக்கொண்டிருந்தததாகவும் ரிசாத் கூறினார்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள அமைச்சரவை உபகுழு இன்று திங்கட்கிழமை கூடியுள்ளது.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் அதாவுல்லா ஆகியோருடன் தானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் டியூ குணசேகர, அமைச்சர் திஸ்ஸ வித்தாரண ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.
பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய போன்ற கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் ஹலால் உணவு முறைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் முஸ்லிம் உலமா சபையை இழிவுபடுத்தும் விதமாக அந்த அமைப்புகள் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்புடன் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம்: றிசாத் பதியுதீன்

0
தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும்.

தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்றுபட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்.

தமிழ் பேசும் சமூகங்கள் பலவீனப்பட்டு அழிய முடியாது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது.

இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30,40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும். நாங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து இந்தத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற தருணம் இப்போது வந்துள்ளது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன்

0
பஷன் பங் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலீஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

நேற்று இரவு பிரஸ்தாப களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும்,ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை பார்வையிட்டதுன்,உரிமையாளருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அதே வேளை தாக்குதல் இடம் பெற்ற இடத்தில் இருந்தவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலில் தொடர்பை ஏற்படுத்தியதுடன்.இவ்வளவு காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலையேற்படுத்தி வந்த அமைப்பு இன்று நேரடியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.இது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் என்பதை விளக்கப்படுத்தியுள்ளதுடன்,இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளை பாதுகாப்பு செயலாளருடனும் இந்த விடயம் குறித்து தொலைபேசியில் உரைாயடியுள்ளதுடன்,சட்டத்தை நடை முறைப்படுத்த பாதுகாப்பு தரப்பு இருக்கின்ற பொது இவ்வாறான செயல்கள் இடம் பெறுவதை நிறுத்தவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொலீஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு,இந்த செயல்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையேற்படுத்தியுள்ளது.இவ்வாறான செயல்கரைள எவர் செய்தாலும் அவர்கள் தாரத்திரம் பாராமால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் எற்பட்ட போதும் நாம் பல முறை இது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது பொலீஸாரின் கடமை என்றும் அமைச்சர் றிசாத் பதீயுதின் பொலீஸ் மா அதிபருக்கு எடுததரைத்துள்ளார்.
இதே வேளை இனிமேலும் இவ்வாறான செயல்கள் இடம் பெறாமல் இருப்பதை பொலீஸார் உறுததிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர்,இந்த சம்பவத்துடன் தொடர்பபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு போதுமான வீடியோ ஒளிப்பதிவுகள் உரியவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஜெனீவாவுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவையா என அரசே தீர்மானிக்க வேண்டும் – ஹமீட்

0
அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா  இல்லையா என்பது அரசின் கைகளிலேயே  தங்கியுள்ளது. என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொதுபல சேனா அமைப்பினர் மறைந்த தலைவர் அஷ்ரப் ஆயுதங்கள் கொண்டுவந்ததாக கற்பனைக்குள் அடங்காத பொய்களைக் கூறியதை வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் வை.எல்.எஸ். ஹமீட் மேலும் குறிப்பிடும்போது;
‘அஷ்ரப் இரகசியமாகக் கொண்டுவந்த இரண்டு கொள்கலன் ஆயுதங்கள் எங்கே?’ என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பாணந்துறையில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார். 21ம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாளரான குறித்த தேரருக்கு அக்கொள்கலன்கள் எங்கே இருக்கின்றது என்பதையும் சேர்த்து ஏன் கற்பனை செய்ய முடியவில்லை என்று கேட்க விரும்புகின்றோம்.
சிலவேளை  குறித்த தேரரே அவற்றை மறைத்து வைத்துவிட்டு முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில்இ தலைவர் மரணித்து இந்த 12 ஆண்டுகளில் புலனாய்வு பிரிவினருக்கோ பொலிசாருக்கோ படையினருக்கோ அல்லது சுங்க அதிகாரிகளுக்கோ அல்லது இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்குமோ தெரியாமல் குறித்த தேரருக்கு மட்டும் தெரியத்தக்கதாக அந்த கொள்கலன்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த 12 ஆண்டுகள் குறித்த தேரர் இக்கொள்கலன்கள் தொடர்பாக  ஏன் மௌனியாக இருந்தார் என்று  கூற வேண்டும். கொள்கலன்கள் வந்ததை அறிந்தவர் அவை  இருக்கின்ற இடத்தினை மாத்திரம் எவ்வாறு அறியாமல் விட்டார். என்று கூறுவாரா?
பொதுபல சேனா இந்த நாட்டின் புலனாய்வுத் துறையின் திறமையை விட அல்லது இந்தியாவின் புலனாய்வுத் துறையின் புலமையை விட திறமை வாய்ந்த ஒரு புலனாய்வுத்துறையை வைத்திருக்கின்றது போலும். அதனால்தான் தமிழ் நாட்டில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டபொழுது கைது செய்யப்பட்டவர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையில் முஸ்லிம் அமைப்புக்கள்தான் அத்தாக்குதலுக்கு காரணம் என்று கூறினார். சர்வதேச பின்னணியில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தோற்றுவித்து நாட்டிற்கு எதிராக ஜெனீவா தீர்மானத்தில் முஸ்லிம் நாடுகளை வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு அதில் தோல்வி கண்ட நிலையில் எதிர்காலத்திலாவது முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக திருப்ப வேண்டும் என்பதற்காக ஸியோனிச சக்திகள் வரைந்து கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் கற்பனைக் கற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் சுமத்திக் கொண்டு செல்கின்றார்.
30 வருட கால யுத்தத்தில் 26 முஸ்லிம்களே கொல்லப்பட்டிருப்பதாக ஒரு கட்டத்தில் இந்த தேரர் கூறினார். அவ்வாறெனில் காரைதீவில் வைத்து கொல்லப்பட்ட நுாற்றுக்கணக்கான முஸ்லிம் பொலிஸார், காத்தான்குடி பள்ளிவாயலில் கொல்லப்பட்ட நுாற்றுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் இன்னும் கொல்லப்பட்ட எத்தனையோ முஸ்லிம்களின் கணக்குகள் அவருக்குத் தெரியவில்லை. இராணுவத்தில் இணைந்து முஸ்லிம்கள் போராடவில்லை என்றும் கூறியிருக்கிறார். பிரிகேடியர் ஸக்கி, புலிகளுடன் சண்டையில் கொல்லப்பட்ட கேணல் முத்தலிப், கெப்டன் முனாஸ் போன்று இராணுவத்தில் போராடிய எத்தனையோ முஸ்லிம் வீரர்கள் தொடர்பாக அவருக்குத் தெரியவில்லை.
ஏனெனில் உண்மைகள் அவருக்குத் தெரியாது. மதகுரு என்று கூறிக்கொண்டு பொய்யையும் கற்பனைகளையும்  முதலீடாக வைத்து அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக செயற்படுபவர்களுக்கு உண்மை எவ்வாறு புரியும்.
துாங்குகின்றவர்களை எழுப்பலாம். பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. குறித்த தேரர் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக ஒரு காலகட்டத்தில் பேசினார். அதன்பின்னர் அவரது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி சமாதானத்திற்கு ஆதரவாக பேசவைக்கப்பட்டார். எந்த நாடு அவரை அவ்வாறு மாற்றியது என்று ஆசாத் சாலி பகிரங்கமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். ஆனால் இன்றுவரை அதனை குறித்த தேரர் மறுக்கவில்லை. அதேபோன்று இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யை மூலதனமாக்கி காழ்ப்புனர்வை கக்கிக்கொண்டு செல்கின்றார். இதன் பின்னால் இருக்கின்ற சக்தி எது என்ற உண்மை விரைவில் வெளிவரத்தான் போகின்றது. உண்மைகள் தற்காலிகமாக உறங்கலாம். ஆனால் நிரந்தரமாக உறங்கிய வரலாறு இல்லை.
பௌத்த துறவி என்று தன்னை அடையாளம் காட்டுகின்ற குறித்த தேரர் பௌத்தத்தில் எந்த இடத்தில் அடுத்த சமயத்தவர் மீது வெறுப்பையும்இ காழ்ப்புனர்வையும் கக்கச்சொல்லி இருக்கின்றது என்று  கூறுவாரா? கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் உண்மையான பௌத்தர்கள் எப்படி இருப்பார்கள் போலிகள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை விபரித்து சமூகங்கள் மத்தியில் இவ்வாறு  பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும் ஒரு சிங்கள் பௌத்தர் எழுதியிருந்தார். அவ்வாறு எத்தனையோ நடுநிலையாக சிந்திக்கின்ற பௌத்த சகோதரர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றை இவர்கள் பார்க்கவில்லையா ?
இவர்கள் செயற்படுத்திக்கொண்டு இருக்கின்ற திட்டம் ஒரு பலமான சக்தியினால் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. என்பது தெளிவாகப் புரிகின்றது. ஏனெனில் தங்களது செயல்கள் எவ்வாறான தாக்கத்தை கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ அதற்கு ஏற்ற விதத்தில் முன் கூட்டியே குற்றச்சாட்டுக்களை சுமத்தி விடுகின்றார்கள். உதாரணமாக தங்களுடைய செயற்பாடுகளை  சகல பௌத்த பிக்குகளும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கு எதிராக பேசுவார்கள். என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை அவர்கள் சாட ஆரம்பித்தபொழுதே பௌத்த பிக்குகளை பிரிக்கின்றார்கள். என்ற ஒரு குற்றச்சாட்டையும் சுமத்திவிட்டார்கள். அதன் பின் சில பௌத்த பிக்குகள் இவற்றுக்கு எதிராகப் பேசியபொழுது ‘பௌத்த பிக்குகளை பிரித்தே விட்டார்கள்’ என்று கூறினார்.
அடுத்தவர்கள் தம்மை அநியாயக்காரர்கள் என்று கூறுவார்கள் என்பது இந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியும். எனவேதான் முன் கூட்டியே அதற்கு ஏற்றாற்போல் கூற்றுக்களை தெரிவித்து விடுகிறார்கள்.
அதேபோன்றுதான் 12 ஆயிரம் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானில் பயிற்சிபெற்று  வந்திருக்கின்றார்கள். என்று ஒரு கட்டுக்கதையை சிறிதும் கூட தயக்கமில்லாமல் சொன்னார்கள். ஏனெனில் தங்களுடைய செயற்பாடுகள் முஸ்லிம் இளைஞர்களை விரக்தியின் விழிம்பிற்குத்தள்ளும். அவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் தீவிரவாதம் தலைதுாக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் இதை நாம் முன்பே கூறினோம். என்று சொல்வதற்காக அந்த கற்பனைக்கதையைக் கட்டி விட்டார்கள்.
பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம். அதேபோல்தான் நாட்டின் உளவுப்பிரிவினருக்கத் தெரியாமல் 12 ஆயிரம் பேர் பயிற்சிபெற்று வந்ததை  குறித்த  தேரர் மாத்திரம் அறிந்திருக்கின்றார். அவ்வாறாயின் அத்தேரர் அவ்வாறு பயிற்சி பெற்றவர்களின் பெயர்களை ஏன்  இன்றுவரை பொலிசாருக்கு வழங்கவில்லை. அல்லது பகிரங்கப்படுத்தவில்லை என்று கூறுவாரா ?
இவ்வாறானவர்கள் தேச விரோத சக்திகள் என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டில் சமூகங்களுக்கிடையில் பொய்யையும் கற்பனைகளையும் கூறி  கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய முற்படுகின்றார்கள்.
நாம் இவர்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வெறுப்பு திடீரென ஏன், எங்கிருந்து, எவ்வாறு வந்தது ? குர்ஆனை வைத்து முஸ்லிம்களை தோற்கடித்ததாக மார் தட்டியிருக்கிறீர்கள். பௌத்தத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாத நீங்கள் பௌத்தம் அன்பையும் பொறுமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க அதற்கு எதிராகச் செயற்படுகின்ற நீங்கள் அடுத்த சமயத்தவர்களின் நுால்களையா புரிந்துகொள்ளப்போகின்றீர்கள்.
தோல்வியே தழுவமாட்டோம். இதுவரை அடைந்ததெல்லாம் வெற்றி. இனிமேல் அடையப்போவதும் வெற்றி என்று இறுமாப்பு எய்துகிறீர்கள். இவ்வாறு முரசொலி கொட்டியவர்கள் வரலாற்றில் நிறையப்பேர் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசுகின்றார்கள். வெற்றியும் தோல்வியும் இறைவனிடத்தில் இருந்தே வருகின்றன என்று நம்புகின்றவர்கள் நாங்கள்.
 முஸ்லிம்களும் சர்வதேச ரீதியாக இந்த நாட்டிற்கும் அரசுக்கும் எதிராக இராஜ தந்திரப்போரை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் சில சர்வதேச சக்திகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாட்டை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சியை வலுப்படுத்த வேண்டும். என்பது தான் உங்கள் திட்டமும் உங்களது சர்வதேச எஜமானர்களின் கட்டளையும் என்றால் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை அரசுதான் எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரசு பாராமுகமாக இருந்தால் முஸ்லிம்களாலும் ஒரு சர்வதேச ரீதியான சாத்வீக பேராட்டத்தை முன்னெடுக்க முடியும். என்பதை நாம் நிரூபிக்க வேண்டிவரும். 120 கோடி முஸ்லிம்கள் வாழுகின்ற இந்த உலகில் நாம் தனித்தவர்களல்ல என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜெனீவா தொடரில் நாம் விரும்பியிருந்தால் நம்மாலும் தாக்கத்தை செலுத்தியிருக்க முடியும். ஆயினும் முஸ்லிம்கள் தாய்நாட்டை நேசிப்பவர்கள் என்ற அடிப்படையில் நாம் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டோம். எனவே அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இந்நாட்டின் முஸ்லிம்களும் நிம்மதியாக அமைதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆகவே அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா இல்லையா என்பது அரசின் கைகளிலேயே  தங்கியுள்ளது. என்றுமுள்ளது.

பாடசாலைகளுக்கு உதவி செய்தாலும் இனவாதம் பேசுகின்றனர்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கவலை

0
பயங்கரவாத செயற்பாடுகள் காணமாக பாதிப்புக்களை கண்ட பாடசாலைகளை புனரமைப்பு செய்கின்ற போது அதில் முஸ்லிம் மாணவர்கள் கற்கின்றார்கள் எனில் அதனை இனவாதமாக சித்தரிக்கும் அமைப்புக்கள் மன்னாரில் காணப்படுவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னால் அமைச்சர் மர்ஹூம் நுர்தீன் மசூர் அவர்கள் விட்டுச் சென்ற அபிவிருத்திகளை முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கூறினார்.
மன்னார் மாவட்டத்தின் பிரபல பாடசாலையாக காணப்பட்ட எருக்கலம்பிட்டி மகளிர் கல்லுரிக்கான இரு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு அமைச்சர் பேசுகையில் –
எருக்கலம்பிட்டி கிராமம் என்பது மிகவும் பிரபலமான கிராமமாகும்.வடமகாணத்தில் மகா வித்தியாயலம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்ட போது அதில் முதலாவது உள்வாங்கப்பட்ட பாடசாலையாகும்.பங்கரவாதிகளினால்  இம்மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட போது  எல்லாம் முடக்கப்பட்டுவிட்டது.நாம் இழந்தவைகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுக்கின்ற போது அவற்றை இனவாதமாக காட்டுகின்றனர்.
.இந்திய வீடமைப்பு திட்டத்தை இங்கு கொண்டுவருகின்ற போது,அதற்கெதிராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்துக்கு பிழையான தரவுகளை கொடுத்து இதனை இல்லாமல் ஆக்குவதற்கு முயற்கிக்கின்றனர்.மன்னாரில் இருக்கின்ற  பொது மக்களுக்கான அமைப்பு என்று கூறுபவர்கள்,அவர்களது இனவாத சிந்தனையினை பிரதி நிதித்துவப்படுத்திவருகின்றனர்.கடும் போக்குடன் முஸ்லிம்களுக்கு எதிராக் செயற்படுகின்றனர்.
இவ்வாறான துர்ப்பாக்கியமான நிலையில் இன்று எமது முன்னெடுப்ப்புக்கள் காணப்படுகின்றன.முன்னால் அமைச்சர் மர்ஹூம் மசூர் அவர்கள் பல தமிழ் கிராமங்களுக்கு உதவி செய்துள்ளார்.அதே போன்று நாங்களும் இனவாதமற்ற முறையில் செயற்படுகின்றோம்.இன்று எருக்கலம்பிட்டி மக்கள் அரசியல் தலைமைத்துவத்தை இழந்து தவிக்கின்றனர்.இந்த இடை வெளியினை நிரப்ப வேண்டிய பொருப்பு எமக்கிருக்கின்றது.
தேர்தல் காலங்களில் பிரிந்து நின்று அரசியல் செய்யலாம்.அது ஜனநாயக உரிமை,ஆனால் இது தேர்தல் காலம் அல்ல அபிவிருத்தியின் காலம்,தற்களது தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளுக்காக வருகின்ற அபிவிருத்திக  தடுப்போமேயானால் அது எதிர் கால எமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும்..சில சகோதர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைமைத்துவங்கள்,கற்றோர்கள் என்று பலர் இன்று ஒன்று சேர்ந்து எருக்கலம்பிட்டி மக்களது நலன் குறித்து எம்மோடு இணைந்து யினை செயற்படுகின்றனர்.
குறிப்பாக கலாநிதி ஹஸ்புள்ளா அவர்கள் எருக்கலம்பிட்டியினை சேர்ந்தவர்,இவர் இந்த எருக்கலம்பிட்டி மக்களுக்கு மட்டுமல்லாது,வட மாகாண முஸ்லிம்களது சமூக,கலாசார ,அபிவிருத்தி விடயங்கள் குறித்தும் மக்களின் பாதிப்புக்கள் குறித்து சமூக மயமாக்கல் செய்வதில் கடுமையாக பாடுபடும் ஒருவர் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ்.ஏ.எச்.எம்.அஸ்வர் தமதுரையில் –

மன்னாரில் எருக்கலம்பிட்டி என்பது மறக்க முடியாதவொரு கிராம்மாகும்.முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சூசைதாஸன்,றஹீம் , மசூர் போன்றவர்கள் இங்கிருந்து தெரிவானவர்கள்.மன்னார் மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வந்த போது கற்பிட்டி கடற்கரையில் நின்று உங்களை வரவேற்றவன் நான்.அப்போது முஸ்லிம்,சமய விவகார அமைச்சராகவும் நான் இருந்தேன்.நீங்கள் கடல் வழியாக வந்த போது பட்ட வலியும்,வேதனைகளும் இன்றும் என் கண்முன் தோன்றுகின்றது.
கையில் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி மன்னாரில் இருந்து புறப்பட்ட நீங்கள் கற்பிட்டியினை வந்தடைந்த போது பிள்ளையினை  கடலில் தவறவிட்ட வரலாறும் உண்டு.
இன்று இந்த மக்களுக்கு எதிராக பேசுபவர்கள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டனர்.ஜெனீவாவுக்கு சென்று எதையோ சொல்கின்றனர்.ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்ட்ட அநீதியினையும் பேச வேண்டும்.
இலங்கை பாராளுமன்றத்தில் எருக்கலம்பிட்டி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நிச்சயமாக பேசுவேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான்,ஆளுநரின் பிராந்திய ஆணையாளர்.எஸ்.எல்.டீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல.எஸ்.ஹமீட்.இணைப்பாளர்களான ஜசார்,பஹீல்,மபாயஸ் உட்பட ப பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சமூகமளித்திருந்தனர்.

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க பெரும்பான்மை கள் சதி-கண்டிக்கிறார் அப்துல் பாரி

0
வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும்,வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான  அப்துல் பாரி கோறிக்கை விடுத்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்.கடந்த 22 வருட காலமாக அந்த மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை.இருந்த போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கின்ற படியால் எமது மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இருந்த போதும் இன்று அவர் எமக்காக முன்னெடுக்கும் இத்திட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு பெரும் பான்மை அரச அதிகாரிகளும்,அவர்களுடன் சேர்ந்து சில அமைப்புக்களும் பிழையான தகவல்களை வெளியிட்டுவருகின்றன.
சுற்றாடல் ஒன்றியம் என்ற அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாடு ஒன்றினை மேற்கோள்காட்டி சிற்கள நாளேடு ஒன்று செய்தியினை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வவுனியா மாவட் நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் அவர் அதில் தெரிவித்துள்ளதாவது.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தற்போது தமது மீள்குடியேற்றத்துக்கு வருகின்றனர்.அன்று மெனிக் பார்மில் இருந்த 3 இலட்சம் மக்களையும் அரசாங்கமும்,அமைச்சர் றிசாத் பதியுதீனும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மீள்குடியேற்றம் செய்தனர்.ஆனால் கடந்த 22 வருட காலமாக இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் காத்திரமான முறையில் இடம் பெறவில்லை.அதனை இன்று செய்ய முனையும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.மன்னார் மாவட்டத்தை பொருத்த வரையில் முசலி பிரதேசம் என்பது முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாகும்.ஆனால் கடந்த காலத்தில் அந்த கிராமம் முழுமையாக விடுதலைப் புலிகளின் கடடுப்பாட்டில் இருந்தது.அங்கு எந்தவொரு முஸ்லிம்களும் வாழமுடியாத நிலை காணப்பட்டது.,அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் விரட்டப்பட்டனர் என்பதை ஊடக மாநாடுகளை நடத்துபவர்கள் மறைத்து,முஸ்லிம்கள் புதிதாக குடியேறுவதாகவும்,அவர்களுக்கு அரச காணிகளை பலாத்காரமாக பெற்றுக் கொடுப்பதாகவும் கூறிவருகின்றனர்.
விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அம் முஸ்லிம்களது காணிகளிலும்,வீடுகளிலும் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.இன்று முஸ்லிம்கள் அங்கு செல்கின்ற போது அது தமிழ் மக்களின் வாழ்விடமாக காணப்படுகின்றது.இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுப்பு செய்வதில் உயர் பண்புகளை கொண்டவர்கள் என்பதால்,அங்குள்ள தமிழ் மக்களுடன் பிரச்சினைகளுக்கு செல்லாமல்,அவர்களும் வாழட்டும்,நாங்கள் வாழ்வதற்கும் இடம் கொடுங்கள் என்ற கோறிக்கையினையே முன் வைத்து வந்துள்ளனர்.
22 வருடங்களின் பின்னர் தமது தாயகத்துக்கு முஸ்லிம்கள் செல்கின்ற போது,வாழ்ந்த இடங்களில் பெரும்பாலான பகுதிகள் காடாக பெரும் மரங்களை கொண்டு காணப்படுகின்றது.இவற்றை துப்பரவு செய்ய முற்படுகின்ற போது,அரச காடுகளை அழிப்பதாக பிரசாரம் செய்கின்றனர்.யுத்த காலத்தின் போது எத்தனை ஆயிரம் எக்கர் நிலங்கள் பாதிக்ககப்பட்டன அப்போது பேசா மடந்தைகளாக இருந்த சுற்றாடல் அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீள்குடியேற முனைகின்ற போது,அதற்கெதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.இதுவும் ஒரு வகையான இனவாதிகளின் செயற்பாடுகள் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒட்டு மொத்தமாகமன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,
யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மாவட்டங்களில் 35ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள்  மீள்குடியேற தயாராகவுள்ளன.அதில் 22 ஆயிரம் குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.அவர்கள் தங்களை மன்னார் மாவட்டத்தில் பதிவும் செய்துள்ளனர்.அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தையும் பெறாமல்,தமது மண்ணில் மீள்குடியேறியுமுள்னர்…இவர்கள் வீடின்றி,அடிப்படை வசதியின்றி படும் அவலத்தை இந்த இனவாத அமைப்புக்கள் ஏன் பார்ப்பதில்லை.இந்த மக்களையும் அவர்களது மண்ணில் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக தான் அமைச்சர் றிசாத் பதீயுதீன் அவர்கள் இரவு பகலாக பணியாற்றுகி்ன்றார்.
இவ்வாறான நிலையில் இனவாதத்தையும்,மத வாதத்தையும் துாண்டி தமிழ்-முஸ்லிம்-சிங்கள மக்களையும் பிளவுபடுத்துவதற்கு பல அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.அரசாங்கத்தின் காணிக் கொள்கையின் பிரகாரம்,அவசர தேவைகளுக்கமைய காணிப் பங்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதனது நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டே இந்த காணிகள் வனபரிபாலன திணைக்களத்தாலோ,அல்லது பிரதேச செயலாளர்களாளோ வழங்கப்படுகின்றது.இந்த நடை முறைகள் மீறப்பட்டிருப்பின் அது குறித்து கவனம் செலுத்தப்படுவது நியாயமானதாகும்.
ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக பெறப்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கும் கருத்து முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.கொழும்பில் இருந்து கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் படும் அவலத்தை அறிந்து கொள்ள முடியாத அமைப்புக்கள் பொய்யான அறிக்கைகளை விடுவதை இனியும் தவிர்த்து இந்த நாட்டில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் அவர்களது தயாக மண்ணில் மீள்குடியேற்ற உதவி செய்ய முன்வருமாறு கோறிக்கை விடுப்பதாகவும் அப்துல் பாரி மேலும் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம்

0
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்.
கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கெளரவ  உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவா்களால் பிரேரிக்கப்பட்ட, சிறுபான்மை இனத்துக்கு மறுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான இந்த ஒத்திவைப்புப் பிரேரணையில், சிறுபான்மையிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் பேசுவதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

கடந்த காலத்தில் ஒரு வரலாறு இருந்தது. சிறுபான்மை இனத்துக்கு ஒரு பாதிப்பு என்றால்,அல்லது ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அடுத்த சிறுபான்மை இனம் அதற்காகக் குரல் கொடுக்கும். அதாவது, முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டபொழுது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்; தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு வரும்பொழுது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்டபொழுது அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்.

ஆனால், இன்று ஓர் இனம் மற்ற இனத்தைத்  துவம்சம் செய்கின்ற ஒரு நிலையைத்தான் எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஓர் இனத்தின் உரிமையை மறுக்கின்ற அல்லது ஓர் இனத்துக்கு நடக்கின்ற அநியாயத்தைப் பார்த்து சந்தோசப்பட்டு அதில் குளிர்காய்கின்ற ஒரு நிலைமையைப் பார்க்கும்பொழுது மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.

கடந்தகால வரலாற்றில் இடம்பெற்ற அந்த நல்ல மனிதர்களைப் போன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்; இல்லையென்று சொல்லவில்லை. ஆனால்,முஸ்லிம் சமூகம் அங்கு குடியேற்றத்துக்காகச் செல்லும்பொழுது அல்லது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப்பற்றிக் கதைக்கின்றபொழுது அதற்கு எதிராகப் பிழையான விதத்தில் குரல் கொடுக்கின்ற ஒரு சிலரைப் பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த அநியாயம் என்ன? விடுதலைப் புலிகள் இராணுவத்தினரைத் தாக்கியபொழுது, அவர்கள் முஸ்லிம்களிடம் கப்பம் அறவிட்டபொழுது,முஸ்லிம்களின் சொத்தை அவர்கள் பயன்படுத்தியபொழுது, முஸ்லிம்களின் வளங்களை அவர்கள் சுரண்டியபொழுதெல்லாம் மெளனமாக இருந்தார்கள் முஸ்லிம் மக்கள்.
அவர்கள் உணவு கேட்டபொழுது சோறு சமைத்துக்கொடுத்திருக்கிறார்கள்; அவர்கள் பணம் கேட்டபொழுது பணம் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம் மக்கள் அவர்களைப் பாதுகாத்த வரலாறுதான் இருக்கின்றது. அவ்வாறிருந்தும், உடுத்த உடையோடு 24மணித்தியாலங்களுக்குள் முஸ்லிம்களை அவர்கள் வெளியேற்றியதற்குக் காரணம் என்ன?அந்த நேரத்தில் அதற்கு நியாயம் கற்பித்த, அதற்கு உறுதுணையாக இருந்த ஒரு சிலர் இன்று அரசியலில் இருந்துகொண்டு அன்று அவர்கள் என்ன நாடகத்தை நடித்து அதனை வழிநடத்தினார்களோ, அதை இன்றும் தொடருவதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 22 வருட காலம் அகதி முகாம்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்கள் அவ்வாறு துன்பங்களை அனுபவிப்பதற்கான  நியாயம் என்ன?
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்குகொண்டார்கள். இந்த நாடு சுதந்திரமடைவதற்கு அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதேபோன்று தமிழ்ச் சகோதரர்களுடைய கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பொழுது அதற்கு ஒத்துழைப்புக்கொடுத்து அதற்காக வாதாடி, அந்தப் போராட்டத்துக்கு உயிரையும் கொடுத்த வரலாறுகள் இருக்கின்றன.இவற்றுக்கெல்லாம் பரிகாரமா, அந்த 22 வருடகால அகதி வாழ்க்கை? என்று கேட்கின்றேன்.யுத்தம் முடிந்ததும்  முஸ்லிம்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் செல்லும்பொழுது இதைவிடப் பரிதாபகரமான நிலையை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த யுத்தத்தின் பங்காளிகளாக இருப்பவர்கள் – அது தமிழராக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், அல்லது சிங்களவர்களாக இருக்கலாம் – நிம்மதியாக, அச்சமின்றி நடமாடக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
இன்று எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் யாரும் – அது தமிழ்க் கூட்ட
மைப்பு உறுப்பினர்களாக இருக்கலாம், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் – யாழ்ப்பாணத்துக்குச் சென்று வரலாம். கடந்த வாரம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நாங்கள் – ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதேபோன்று கூட்டமைப்பைச் சோ்ந்த கெளரவ சுமந்திரன் அவர்களுடைய செயலாளர் ஆகியோர் – வட பகுதியின் அபிவிருத்திக் களநிலவரத்தைப் பார்ப்பதற்காக பஸ்ஸில் பிரயாணம் செய்தோம்.
அனைவரும் ஒரு பஸ் வண்டியிலே கிளிநொச்சிக்குச் சென்றிருந்தோம். கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள், அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அங்கு செல்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும்  செய்து தந்தார். அதற்காக இச்சந்தர்ப்பத்திலே நாங்கள் அவருக்கு எமது நன்றியுடன்கூடிய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவ்வாறே, நாங்கள் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தோம். முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்புலவு பிரதேசத்துக்குச் சென்றோம். அங்குள்ள இராணுவத்தினரால் ஐம்பது வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு கட்டுவதற்கு அரசாங்கம் மூன்றேகால் இலட்சம் ரூபாய் பணம் கொடுக்கின்றது. அங்குள்ள இராணுவத்தினர்  மூன்றே முக்கால் இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
 இவ்வாறான நல்ல நிலைமையொன்றை உருவாக்குவதற்காக முஸ்லிம் சமூகத்தினரும் பாடுபட்டு உழைத்திருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் மக்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீள்குடியேறச் செல்லும்பொழுது, முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்வதாகச் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகைகளில் அறிக்கை விடுகின்றார்கள்.
சில இனவாத பெளத்த அமைப்புக்கள், சிங்களவர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகக் கூறுகின்றன. நான் நேற்றைய  பத்திரிகையில் “வட மாகாணத்தில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்றார்கள்” என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்ததைப் பார்த்தேன். இன்று இந்த நாட்டில் சமாதானம் உருவாவதற்குக் காரணமாக இருந்ததற்காகவா, நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? எனக் கேட்கின்றேன்.எங்களுக்கும் மானம், இரத்தம், துணிவு என்பன இருக்கின்றன. நாங்கள் கொதித்தெழுந்தால் மிக மோசமான நிலைமை உருவாகும். அடக்குமுறைக்கும் ஓர் அளவு இருக்க வேண்டும்.
வவுனியாவில் சாளம்பைக்குளம் கிராமம் யாருடையதென்று, அப்பிரதேசத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்களிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். 1990ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாளம்பைக்குளக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டபொழுது அப்பிரதேசத்தில் 5-6 தமிழ் குடும்பங்கள் மாத்தி்ரமே இருந்தன. முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னரே அப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் பார்க்கின்றோம். நாங்கள் அவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறி அந்தக் காணிகளிலிருந்து துரத்தவில்லை. வன்னி மாவட்டஅபிவிருத்திக் குழுவுக்குப் பொறுப்பாகவிருக்கின்ற கெளரவ அமைச்சர் றிஸாத்பதியுதீன் அவர்கள் அம்மக்களிடம்,
நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே இருங்கள்ஆனால்உங்களுடைய காணிக்கு அருகில் முஸ்லிம் மக்கள் குடியிருப்பதற்குஅனுமதியுங்கள்” எனக் கேட்டிருக்கின்றார்.   அவ்வாறு முஸ்லிம் மக்கள் அவர்களுடைய காணிக்கருகில் உள்ள காட்டைத் திருத்திக் குடியிருந்ததனால்,  தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், “தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்றார்கள்” என பத்திரிகையில் அறிக்கை விடுகின்றார்.
ஏன், இத்தகைய அறிக்கையொன்றை விடவேண்டும்? எனக் கேட்கின்றேன். முஸ்லிம் மக்கள் தொன்றுதொட்டு வாழ்ந்த காணிகளைத் தமிழ் மக்கள் ஆக்கிரமிப்புச் செய்து  குடியிருந்தவேளையில் முஸ்லிம்கள் அதற்கெதிராகக் குரல் கொடுக்காமல், பத்திரிகைகளில் எவ்வித அறிக்கையும் வெளியிடாமல்,அவர்களை விரட்டியடிக்காமல் இருந்ததற்குப் பரிசாகவா, இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்  பத்திரிகையில் இவ்வாறான அறிக்கையை  வெளியிடுகின்றார்? என நான் கேட்கின்றேன்.
அதேபோன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மடுப் பிரதேசத்தில் சுமார் 150 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டபொழுது  மடுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவராக இருக்கின்ற நான், அப்பிரதேசத்திலுள்ள காணிகளை இறைவனுக்குப் பயந்து அவர்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளித்து தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன். இவ்வாறு செய்ததற்காகவா, இந்த பெளத்த இனவாத அமைப்பு அங்குள்ள காணிகளை முஸ்லிம் மக்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்றார்கள் என்று கூறுகின்றது? எங்களுக்கு இன்னமும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. LLRC அறிக்கையில், “வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் பிரச்சினை, 1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி LTTE யினரால் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் பலவந்தமாக  வெளியேற்றப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியது; இப்பிரதேசங்களில் ஓர் இனத்தை அழிக்கும் திட்டத்தின்கீழ் LTTE யினரின் துப்பாக்கி முனையில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகினர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.LLRC அறிக்கையின் 9.1.9.2. பிரிவில், “ஓர் இனத்தை அழிக்கின்ற முயற்சியில் LTTE யினர் ஆயுதமுனையில் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்கின்றார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
LTTE யினர் மேற்கொண்ட அந்த நடவடிக்கையின் ஒரு கட்டமா அல்லது அதன் தொடர்ச்சியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் இவ்வாறு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின்மீது மண் அள்ளிப்போடும் விடயம்?எனக் கேட்கின்றேன்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் பங்கீடு செய்யப்பட்டுக் கொடுக்கின்றபொழுது முஸ்லிம் பயனாளிகள் கூடுதலாகத் தெரிவுசெய்யப்பட்டு வீடுகள் கையளிக்கப்படுகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றார்கள்.
இவர்களால் முடியுமாயின் அதனை நிரூபித்துக் காட்டட்டும். உதாரணமாக, மன்னார் மாவட்டத்திலுள்ள முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள தம்பட்டமுதலிக்கட்டு என்னும் எனது கிராமத்தில் 275 குடும்பங்கள் இருக்கின்றன. அதற்கு அருகில் கொக்குப்படையான் என்ற தமிழ்க் கிராமம் இருக்கின்றது.நாங்கள் இந்த இரண்டு கிராமங்களையும் இந்திய வீட்டுத் திட்டத்துக்காகத் தெரிவுசெய்தபொழுது, கொக்குப்படையானில் கிட்டத்தட்ட175 குடும்பங்கள் இருந்தன.அவற்றில் கிட்டத்தட்ட 150 -160 பேருக்கு கல்வீடுகள் இருந்தன. அவற்றை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் கட்டிக்கொடுத்திருக்கின்றன; இன்னும் கிட்டத்தட்ட 15-20குடும்பங்களுக்கே வீடுகள் தேவையாக இருந்தன.
எனது கிராமத்தை எடுத்துக்கொண்டால்,அங்குள்ள 275 குடும்பங்களில் ஒன்பது குடும்பங்களுக்குத்தான் வீடுகள் இருந்தன. எனவே,பயனாளி தெரிவில் தம்பட்டமுதலிகட்டுவுக்கு 170 வீடுகள் தேவையாக இருந்த அதேவேளை,கொக்குப்படையானில் 15 வீடுகள் தேவையாக இருந்தன. இது யார் செய்த தவறு? இது நாங்கள் நியாயமாக நடந்ததன் விளைவு! ஆரம்பத்தில் பயனாளிகளைத் தெரிவுசெய்தபொழுது,தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதாவது, முஸ்லிம்கள் தங்களது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு முன்னர், தமிழ் மக்கள் தங்களது கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு எமது வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கெளரவ அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அவர்கள் காணிகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
இதேபோன்று அரிப்புத்துறை கிராமத்தை எடுத்துப் பாருங்கள்! அங்கு வாழுகின்ற 80 – 85வீதமானவர்களுக்கு வீடு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அருகிலுள்ள அல்லிராணிக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கின்ற முஸ்லிம் கிராமங்களை எடுத்துப் பாருங்கள்! அங்குள்ள எவருக்கேனும் ஒரு வீடுகூட இன்னமும் கிடைக்கவில்லை. எனவே,பயனாளி தெரிவில் இங்கு கூடுதலானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்களா? அல்லது அங்கு கூடுதலானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்களா? என்று அங்கலாய்க்காமல் உண்மை நிலை என்ன என்பதை practicalஆகப் பார்க்கவேண்டும்.
பத்திரிகையில் வெளிவருவதையோ அல்லது யாராவது சொல்வதையோ கேட்டுவிட்டு, இவ்வாறு பத்திரிகைகளில் அறிக்கை விடக்கூடாது.இவ்வாறு அறிக்கை விடுவது இனமுறுகலை ஏற்படுத்தும்; இனவிரிசலை ஏற்படுத்தும்.இவ்வாறானவர்களின் அறிக்கைகள், உரைகள் இந்த நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படுவதற்கு, இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கும். இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களும் நான் மதிக்கின்ற மாண்புமிகு சுமந்திரன் அவர்களும்  இருக்கின்றார்கள்.
இவர்கள் நியாயம் தெரிந்தவர்கள்; நல்லெண்ணம் கொண்டவர்கள். எனவே, இவர்களாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற எமது தலைவர்களை முதலில் அழைத்துப் பேச வேண்டும் என்றுஅன்பாகவும் பணிவாகவும் கேட்டுக்கொள்கிறேன். [இடையீடு] முதலில் நாங்கள் பேசிக்கொள்வோம். இனப்பிரச்சினைத் தீர்வு என்பது வட மாகாணத்தில் தமிழர்களுக்கான,தமிழ் பேசுபவர்களுக்கான தீர்வாக இருக்க வேண்டும்.
அதாவது அது வெறுமனே தமிழ் மக்களுக்கான, கிறிஸ்தவ மக்களுக்கான, இந்து மக்களுக்கான மற்றும் முஸ்லிம் மக்களுக்கான தீர்வாக இல்லாமல் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வாக இருப்பதற்கு முதலில் நாங்கள் ஒன்றாக இருந்து கதைக்க வேண்டும். அதற்குப் பின்னர் நாங்கள் அரசாங்கத்துடன் பேசியோ,ஜெனீவாவுக்கு அல்லது வேறு எங்கேயாவது சென்று பேச்சுவார்த்தை நடத்தியோ, எங்களது உரிமைகளைக் கேட்போம் என்று இந்த நேரத்திலே தெரிவித்து, இதற்குப் பிறகாவது பிழையான அறிக்கைகளை, இனவாதத்தைத் தூண்டுகின்ற அறிக்கைகளைப் பத்திரிகைகளில் வெளியிடாமல் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றிணைந்து பேசி அதனைத் தீர்த்துக் கொள்வோம் என்று கேட்டு, விடைபெற்றுக்கொள்கின்றேன்.  நன்றி, வஸ்ஸலாம்.

நெசவுத் துறையில் தொழில் இழந்தோருக்கு நஷ்டயீடு வழங்கப்பட்டது

0
1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் தனியார் துறையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நெசவு கைத்தொழில் துறையில் பணியாற்ற முடியாமல் வேலையிழந்தவர்களுக்கு நஷடயீட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

1960-70 ஆம் ஆண்டு காலப்பகுதி இத்துறையின் மிகவும்

முக்கியத்துமிக்கதாகும்.அதன் ஆட்சிக்கு வந்த அரசு மேற்கொண்ட நடை முறையினால் இத்துறையானது பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
அதனால் அத்துறையில் பணியாற்றிய ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது.அன்றைய அரசு தமது கட்டுப்பாட்டில் இருந்த இத்திணைக்களத்தினை தனியார் துறைக்கு வழங்கியதால்,10 வருடங்களுக்கு மேலாக  பணியாற்றி ஊழியர்கள் ஓய்வூதியத்துக்குள் உள்வாங்கப்பட்டதுடன்,ஏனைய ஊழியர்கள் தொழிலை இழக்க நேரிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிறகு மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கமைய பணியிழந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இந்த வகையில் மொத்தம் 3605 பேருக்கும்,அதில் மரணமான 196 பேரின் குடும்பத்திற்கும் இந்த நஷ்டயீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரு கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன்,முதற் கட்ட கொடுப்பனவு மார்ச் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னா் வழங்கப்பட்டுவிடும் என்றும் கை்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு வைபவரீதியாக இந்த கொடுப்பனவுகள் அமைச்சின்  கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர்களான அதாவுட செனவிரத்ன,வாசுதேவ நாணயக்கார,அமைச்சர் றிசாத் பதியுதீன்,அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் இன துவேசிகளுக்கு எதிராக பாரிய ஆரப்பாட்டம்

0
வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம்,சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவைில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாகவும்,அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்வெள்ளிக்கிழமை பாரிய  பேரணியொன்று இடம் பெற்றது.

வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.வவுனியா பசார் வீதியிலிருந்தும்,வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகள் ஆரம்பமானதுடன் இவ்விரு பேரணிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையினை வந்தடைந்தன.

பேரணியில் கலந்து கொண்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் தமது கைகளில்  தமிழ் தேசிய கூட்டமைப்பே அழிக்காதே,அழிக்காதே இன உறவை அழிக்கதே,மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தாதே,கடந்த 30 வருடம் நாம் பட்ட கஷ்டம் போதும்,எமக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை தடை செய்யாதே,ஜனாதிபதியின் ஆட்சியில் தான் நாம் நிம்மதியாக இருக்கின்றோம்,அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பே தொலைக்காதே,எமக்கு எதுவும் உம்மால் செய்ய முடியாவிட்டால்,மௌனமாக இரு,புலிகளுக்கு அன்று வக்காலத்து வாங்கிய வன்னி தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களே.
இன்றும் அதனை செய்து எம்மை காட்டிக் கொடுக்காதே,தமிழர்களாகிய எமக்கு கிடைத்துள்ளள்ள இந்திய வீட்டுத்திட்டத்தை இல்லாமல் ஆக்காதே,அமைச்சர் றிசாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் காணப்பட்டதுடன்,கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் சில மணி நேரம் வவுனியா மன்னார் வீதி,வவுனியா யாழப்பாணம் வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமது மகஜர அரசாங்க அதிபரிடம் கையளிக்க பொலீஸார் அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்பான நுழைவாயிலை மூடியிருந்தனர்.பின்னர் ஒரு சிலர் மட்டும் அரசாங்க அதிபரை சந்தித்து தமது மகஜரை கையளிக்க சந்தரப்பம் வழங்கப்பட்டிருந்தன.
அவர்கள் தமது நியாயமான கோறிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தாக அமைப்பின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்தார்.
SAM_0122

மின்சாரம் வழங்கியமைக்கு நன்றி-மக்கள் கடிதம்

0
வவுனியா மாவட்டத்தில் உள்ள பூவரசன்குளம் மணியார் குளம் 50 வீட்டுத்திட்டத்திற்கு மின்சாரம் பெற்றுத் தந்தமைக்கு அப்பிரதேச மக்கள் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.கணகலிங்கம் தலைமையிலான செயலாளர் மகேந்திர ராசா,பொருளாலர் இ.விஜயகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
நீண்ட காலமாக இருளில் இருந்த எம்மை வெளிச்சத்தின் பால் கொண்டுவரும் வகையில் எமது கிராமத்திற்கு தேவைாயன மின்சார வசதியினை குறுகிய காலத்துக்குள் பெற்றுத் தந்து எம்மையும் அபிவிருத்தியின் பக்கம் இட்டுச் சென்றமைக்கு இக்கிராம மக்கள் தங்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
எமது தேவைகளை இனம் கண்டு அவற்றை நிறைவு செய்து தரும் வகையிலும்,அபிவிருத்திகள் என்று வரும் போது அதனை சமமாக எமக்கும் கிடைக்கும் வகையிலும் தங்களது செயற்பாடுகள் அமைந்துள்ளதை பாராட்டாமல் இருக்க முடியாது.முஸ்லிம் சமூகப் பிரதி நிதியாக நீங்கள் இருந்த போதும்,வவுனியாவில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்தையும் எவ்வித இனபாகுபாடுகளுமின்றி கெடந்த காலங்களில் பெற்றுக் கொடுத்துள்ளதை எமது சங்கம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராகவும் வன்னி மாவட்ட அனைத்து இன மக்களின் சேவகனாக நின்று எமது மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்கும்,மணியர்குளம் 50 வீட்டுத்திட்டத்தில் உள்ள 65 குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்கியுள்ளமை எமது வாழ்வில் வரலாற்று பதிவாகும் என்பதை நாம் சுட்டிக்காட்டுவதுடன்,இவ்வாறான செயல்கள் 5லம் தமிழ் மக்கள் மத்தியில் தாங்கள் சிறந்த தலைவராக பறிமாற்றம் கண்டுள்ளதையும் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சியினை அடைகின்றோம்.என கிராம அபிவிருத்தி சங்கம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

திவி நெகும திட்டத்தின் மூலம் வடமாகாணமே அதிக நன்மையடையும்-ஹூனைஸ் எம்.பி

0

திவிநெகும தேசிய திட்டத்தின் மூலம் அதிகமான நன்மையினை வடமாகாணமே அடையப் போகின்றது.இவ்வாறு நன்மையடையும் போது எமது பிரதேசங்களும் பல் துறைகளிலும் அபிவிருத்திகானும் என்பதை உறுதியாக கூறுகின்றேன் என்று மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இன்று கூறினார்.


மடு பிரதேச செயலகப் பிரிவில் வறுமையற்ற இலங்கையினை ஏற்படுத்தும் தேசிய திட்டத்தினை மக்கள் மத்தியில் அறிமுகம செய்து வைக்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போது-
கடந்த கால யுத்தம்,இயற்கை அழிவுகள் என்பன எமது மக்களை பாதித்துள்ளது.இவ்வாறு துயருற்று இருக்கும் எமது மக்களுக்கு ஆறுதலை தருவனவாக இந்த அபிவிருத்தி திட்டங்களே,இதனை நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்பது தான் எமது ஆசையாகும்.

வெள்ள அச்சுறுத்தலின் போது நாம் எவ்வாறு அரச அதிகாரிகளுடன் ஒன்றுபட்டு எமது தேவைகளை பெற்றுக் கொள்வதில் செயற்பட்டோமோ அதே போன்று அபிவிருத்தி திட்டங்களிலும் நாம் செயலாற்ற வேண்டும்.எமக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி அதன் 5லம் தமது இலக்குகளை அடைந்து கொள்ளவென சிலர் செயற்படுகின்றார்கள்.அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதை எமது மக்கள் நன்றாக விளங்கி வைத்துள்ளார்கள்.
திவிநெகும திட்டம் என்பது வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மக்களது முயற்சிகளுக்கு சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் ஒன்றாகவே இருக்கின்றது.

விசாயம்,கால்நடை,தொழில் வாய்ப்பு,சேமிப்பு துறைகள் குறித்து பொது மக்களை தெளிவுபடுத்துவதுடன் அதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும்  உதவிகள் என்பனவற்றை பெற்றுக் கொடுக்கும் முக்கியமானதொரு திட்டம் தான் வாழ்வெழுச்சி திட்டமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இங்கு கூறினார்.