Breaking
Sat. Apr 27th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (31) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, 04 பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பொது சமூக சேவைகள் அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும், அத்தியாவசிய உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
 
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று, மக்களை சந்தித்துக் கலந்துரையாடிய அவர். தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Related Post