எம்.எம்.ஜபீர்
பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களினால்; கொழுபிலுள்ள அமைச்சரின் அலுவலத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (25) நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான சீ;.எம்.ஹலீம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.