Breaking
Sun. May 19th, 2024

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது ஏழை பள்­ளி­வாசல் பணி­யா­ளர்கள் போன்­றோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்தார்.

நேற்­றுக்­காலை கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் இவ்­வ­ருடம் ஹஜ் கோட்டா ஆகக்­கூ­டி­யது 50ஆகவும் ஆகக் குறைந்­தது 15ஆகவும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இது ஓர் சிறந்த முறை­யாகும். இதனை நான் பாராட்­டு­கிறேன். அமைச்சர் ஹலீ­முக்கு நன்­றி­களைத் தெரி­விக்­கிறேன். கடந்த வரு­டங்­களில் நான் ஹஜ்­கு­ழுவின் இணைத்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் என்­னையும் மீறி தவ­றுகள் இடம்­பெற்­றன. இத்­த­வ­றுகள் எதிர்­கா­லத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களில் நடை­பெ­றக்­கூ­டாது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமோ முஸ்லிம் விவ­கார அமைச்சோ ஹஜ் பய­ணி­களின் பணத்தில் இல­வச பய­ணங்களை அனு­ம­திக்­கக்­கூ­டாது. ஹஜ் பய­ணி­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்காக டாக்­டர்கள் இரு­வ­ருக்கு மேல் அழைத்துச் செல்­லக்­கூ­டாது.

அவர்கள் சம்­பளம் பெறாது இல­வச சேவை வழங்­கு­வ­தாக இருக்க வேண்டும். ஹஜ் பய­ணி­களின் பணத்தை வீணாக செல­வ­ழிப்­ப­வர்கள் அல்­லாஹ்வின் கோபத்­துக்கு உள்­ளா­வார்கள்.

அக்­கு­றணைத் தொகு­தியில் போட்டி

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் அக்­கு­ற­ணைத்­தொ­கு­தி­யிலே போட்­டி­யி­டத்­தீர்­மா­னித்­துள்ளேன். கடந்த அர­சாங்­கத்தில் பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்து அக்­கு­றணைத் தொகு­திக்கும் கண்டி மாவட்­டத்­துக்கும் பல சேவை­களை முன்­னெ­டுத்­துள்ளேன்.

முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல சிங்­கள மக்கள் அதி­க­மானோர் எனக்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள். வெளி­மா­வட்ட முஸ்­லிம்கள் கண்டி மாவட்­டத்­துக்கு வந்து போட்­டி­யி­டு­வதால் கண்டி மக்கள் எது­வித நன்­மையும் பெற்­றுக்­கொள்­வ­தில்லை. எனவே எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து கொழும்பு பேரு­வளை பகு­தி­யி­லி­ருந்து கண்­டிக்கு வரும் வேட்­பா­ளர்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் மிகவும் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் யாரால் சேவைகள் நடைபெற்ற­ன என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டி மாவட்டத்தில் பிறந்து அங்கேயே வாழ்பவர்களுக்கே கண்டி மக்கள் மீது அதிகமான பற்றுதல் இருக்கும் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என்றார். m

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *