பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ் மல் சர்ச்சையான முறையில் பந்து வீசுவதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. அவர் 15 டிகிரிக்கு அதிகமாக கையை வளைப்பதாக கூறி தடை விதித்துள்ளனர்.இதனால் சயித் அஜ் மல் பந்து வீசும் முறையை சரிபடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்து உள்ளது. இதற்காக முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் உதவியை நாடியுள்ளது.இதை அவர் ஏற்று கொண்டு உள்ளார். சயித் அஜ் மலுக்கு உதவ தயாராக உள்ளதாகவும், இதற்காக லண்டனில் இருந்து பாகிஸ்தான் செல்வேன் என்றும் சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.