Breaking
Sun. May 19th, 2024

கெட்­ட­ கு­ண­முள்ள, ஒழுக்­க­மற்ற சிங்­கள மக்கள் வாழும் பக்­க­மாக தலை­வைத்துக்கூட உறங்­க­மாட்டேன் என அன்று அந­க­ரிக தர்­ம­பால தெரி­வித்தார். ஏனென்றால் அவ­ரது சிந்­த­னை­களை முன்­னெ­டுப்­பதில் ஏற்­பட்ட முட்­டுக்­கட்­டை­களே இவ்­வா­றான கருத்தை வெளி­யிடும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

இன்று சில அடிப்­ப­டை­வாத தேசப்­பற்­றா­ளர்கள் அந­கா­ரிக தர்­ம­பா­லவை இன­வா­தி­யாக சித்­த­ரிக்க முயல்­கின்­றனர். இதனை எதிர்க்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீமத் அநகாரிக  தர்­ம­பா­லவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்­னிட்டு நேற்று திங்­கட்­கி­ழமை பன்­னிப்­பிட்­டிய தர்­ம­பால வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,
சிங்­க­ள­வர்கள் தமது இனத்தை கட்­டி­யெ­ழுப்­பிக்­கொண்டு எவ்­வாறு முன்­னோக்கிப் பய­ணிப்­பது என்­பதை அந­கா­ரிக தர்­ம­பால தெளி­வு­ப­டுத்­தினார்.

பௌத்த சிந்­த­னைக்குள் தேசி­யத்தை மதித்து ஒரு­பக்கம் தேசிய தொழிற்றுறையை தேசிய உற்­பத்­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தோடு மறு­புறம் சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்­வ­தற்கும் தேசிய முக்­கி­யத்துவத்தை கருத்தில் கொண்டு நாட்டில் அனைத்து பிள்­ளை­களும் சிங்­கள மொழியில் தேர்ச்சி பெறு­வதைப் போன்று ஆங்­கிலம், தமிழ் மொழி­க­ளிலும் தேர்ச்சி பெற­வேண்­டு­மென்றார்.
ஆனால் அன்­றைய கால­கட்­டத்தின் சில அடிப்­ப­டை­வா­திகள் அவரை சிங்­கள இனத்­துக்காக குரல் கொடுத்த வீரர் என வெளிப்­ப­டுத்த முயற்­சித்­தனர்.

இதனை நான் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன். இன்று சில தேசப்­பற்­றா­ளர்கள் அடிப்­ப­டை­வா­திகள் பிழை­யான அர்த்­தத்தை கற்­பிக்­கின்­றனர்.

அந­க­ாரிக தர்­ம­பால இன­வா­தி­யல்ல. நாட்டை, தேசி­யத்தை, மக்­களை நேசித்­தவர். அனை­வரும் ஒற்­று­மை­யாக நாட்டை எப்­படி முன்­னேற்­று­வது என்ற சிந்­தனை கொண்­டவர்.

ஆனால் அவ­ரது தேசிய சிந்­த­னை­களை நிறை­வேற்ற அவரால் முடி­யாது போனது. அதற்கு முட்­டுக்­கட்­டைகள் போடப்­பட்­டன. எனவே மனம் நொந்து போன அவர் தனது இறுதிக் காலத்தில் இந்­தி­யா­வுக்கு சென்றார்.
அப்­போது இவ்­வா­றா­ன­தொரு
கருத்தை வெளி­யிட்டார்.

கெட்­ட கு­ண­முள்ள ஒழுக்­க­மற்ற சிங்கள
மக்கள் வாழும் பக்கமாக தலை வைத்துக் கூட உறங்கமாட்டேன் எனக் கூறினார்.

இதற்குக் காரணம் அவர் எதிர் பார்த்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தான் மனம் நொந்து இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்றும் ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *