Breaking
Tue. May 14th, 2024

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் எந்­த­வொரு விசா­ர­ணையும் தேவை­யில்லை. தற்­போ­தைய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள உள்­ளக போர்க்­குற்ற விசா­ர­ணை­யா­னது அமெ­ரிக்­காவின் சதித்­திட்­ட­மாகும். இது நாட்­டுக்கு ஆபத்­தா­னது என சிரேஷ்ட ராஜ­தந்­தி­ரி­யான தயான் ஜய­தி­லக்க தெரிவித்­துள்ளார்.

அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். மற்­ற­படி போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இதற்­கான பரி­கா­ர­மாக அமை­யாது என­வும் ­கு­றிப்­பிட்­டுள்ளார்.

ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்வி ஒன்­றி­லேயே தயான் ஜய­தி­லக்க மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.குறித்த செவ்­வியில் அவர்­தொ­டர்ந்து கூறியுள்ளதாவது,உலகின் எந்­த­வொரு நாடும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தி தண்­டனை அளித்த வர­லாறு இல்லை. அவ்­வாறு விசா­ரணை நடத்­திய நாடு­களும் பல வரு­டங்கள் கழிந்த பின் ஒப்­புக்­கா­கவே போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தன.

இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் எந்­த­வொறு பய­னும்­இல்லை. யாரும்­தண்­டிக்­க­ப்ப­டு­வதும் இல்லை.போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ ணை­க­ளுக்குப் பதி­லாக குறித்த விட­யங் கள் தொடர்­பான ஞாப­கங்­களை காலப் போக்கில் மறக்கச் செய்யும் முயற்­சி­க­ளையே மேற்­கொள்ள வேண்டும்.

இது தொடர்­பான விட­யங்­களை தோண் டித் துரு­வாமல் காலங்கள் கடந்த பின்பு நடை­பெற்ற தவ­று­க­ளுக்கு நியா­யங்­களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். மற்­ற­படி போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இதற்­கான பரி­காரம் இல்லை.

தற்போதைய அரசாங்கம் மேற்கொள் ளவுள்ள உள்ளக போர்க்குற்ற விசாரணை யானது அமெரிக்காவின் சதித்திட்டமாகும். இது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று கூறியுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *