Breaking
Wed. May 15th, 2024

நாட­ளா­விய ரீதியில் நேற்று நண்­பகல் 12.00 மணி­யுடன் நிறை­வுக்கு வந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களில் 7 பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். தம்­புள்ளை, நாரம்­மல, பன்­னல, ஹுங்­கம, கிரி­உல்ல மற்றும் புளத் சிங்­கள ஆகிய பகு­தி­க­ளி­லேயே இந்த விபத்துச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரிவித்துள்ளது.

நேற்று அதி­காலை தம்­புள்ளை பொலிஸ் பிரிவின், தம்­புள்ளை – கெக்­கி­ராவை பிர­தான வீதியின் மிரிஸ்­கோ­ணி­யாவ சந்­தியில் தனியார் பஸ் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பய­ணித்த 26 பேர் காயமடைந்து தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டனர்.

வவு­னி­யாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த குறித்த அரை சொகுசு தனியார் பஸ் வண்டி வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது பாதையை விட்டு விலகி லொறி ஒன்­று­டனும் மரம் ஒன்றிலும் மோதி இந்த விபத்து சம்­ப­வித்­துள்­ள­தாக தம்­புள்ளை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை நாரம்­மல பிர­தே­சத்தில் இருந்து குளி­யா­பிட்­டிய நோக்கி பயணித்த தனியர் பஸ் ஒன்று அதற்கு முன்னால் சென்­றுகொண்­டி­ருந்த துவிச்­சக்­கர வண்­டி மீது மோதி­யதில் அதில் பய­ணித்த நபர் உயி­ரி­ழந்­துள்ளார்.

பன்­னல – குளி­யா­பிட்­டிய பிர­தான வீதியின் பர­கம்­மன சந்­திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டி ஒன்­றுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த நபர் உயி­ரி­ழந்­துள்ளார்.

இத­னை­விட மாத்­தறை – திஸ்ஸ பிர­தான வீதியில் பாதையை கடக்க முயன்ற பாத­சாரி ஒருவர் மோட்டார் கார் ஒன்­றினால் மோதப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார். இச்­சம்­பவம் ஹுங்­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை கிரி­உல்ல பொலிஸ் பிரிவில் கிரி உல்ல – நாரம்­மல பிர­தான வீதியில் வேனொன்று முன்னால் சென்­று­கொன்­டி­ருந்த மோட்டர் சைக்கிள் மீது மோதி­யதில் துவிச் சக்­கர வண்­டியில் பய­ணித்­தவர் உயி­ரி­ழந்­துள்ளார். நாரம்­மல பிர­தே­சத்தில் இருந்து கிரி உல்ல நோக்கி பய­ணித்த வேனே இவ்­வாறு முன்னால் பய­ணித்த துவிச் சக்­கர வண்­டியை மோதி­யுள்­ளது.

இத­னி­டையே ஹொரனை – புளத்­சிங்­கள பிர­தே­சத்தின் கீழ் நாரங்­கல பாலத்­திற்கு அருகில் பார­வூர்தி ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

வாக­னத்தின் சார­தியும், மேலும் இரண்டு பெண்­க­ளுமே சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த பாரவூர்திக்கு முன்னால் வந்த முச்சக்கர வண்டிக்கு இடமளிப்பதற்காக பாரவூர்தி ஒதுங்கிய போது, அது பள்ளம் ஒன்றில் வீழ்ந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *