பூமுதீன்
மன்னார் நாணாட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மண்டம் நேற்று திற்ந்து வைக்கப்பட்டது.
வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இக் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்தனர்.
நாணாட்டன் பிரதேச மக்களின் தேவையைக் கருத்திற்கு கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினால் இக்கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திநகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திர சிறி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக், முத்தலிப் பாவா பாறுக், வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.