Breaking
Mon. Apr 29th, 2024

ஓட்டமாவடி அஹமட் இர்சாட்

 

இன்றைக்கு Facebook இல் நமது முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் அட்டகாசம் ஒன்றல்ல இரண்டல்ல. இந்த facebook ஆனது நமது சமுதாயத்தில் கூடுதலான மக்களின் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் தொலைத்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சில வரம்புகளை நமக்கு போட்டுள்ளார்கள். அதில் பலவற்றை நாம் facebook இல் மீறிக் கொண்டிருக்கின்றோம்.

அதாவது நபி அவர்கள் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் எப்படி பழக வேண்டும் என்பதை கூட நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் நமக்கு எத்தனையோ பாடங்களை படிக்க முடியும்.

ஆனால் நமது ஒரு சில சகோதர சகோதரிகள் நல்லிரவு மூன்று, நான்கு மணிவரைக்கும் facebookல் இருக்கின்றார்கள்.facebook-addiction-disorder-health-problems

இவர்கள் சுபஹ் தொழுவது கிடையாது, அவர்களின் கண்களுக்கு அவர்கள் ஒய்வு கொடுப்பது கிடையாது. இதனால் இவர்களின் நிலைமை என்னவென்றால், இந்த உலகத்திலே அவர்கள் பார்வையை இழந்து நஷ்டமடைய போகிறார்கள். மற்றும் அல்லாஹ்விடத்திலும் இதற்கு பதில்சொல்லவும் வேண்டி இருக்கிறது.

Facebook எதற்கு பயன்படுத்த படுகிறது என்றால், பெரும்பாலும் அது முழுக்க முழுக்க பாலியல் சீர்கேடுதான். யாராவது ஒருவர் ஒரு சினிமா நடிகையின் போட்டோவை post பண்ணினால் போதும் எல்லோருடைய கவனமும் அந்த போட்டோவில் தான் இருகின்றது.

அந்த போட்டோவுக்கு comment எழுதுவதும் அதை share பண்ணுவதும்தான் அவர்களின் வேலையாக இருந்து கொண்டிருக்கிறது.

நாம் share பன்னுவதற்கு எத்தனை நல்லவிசயங்கள் இருந்தாலும், அதை செய்வதில்லை.

உதாரணமாக, நபிகளாரின் ஒரு பொன்மொழியை post பண்ணினால் அதை ஒரு சிலர் மட்டும்தான் share பன்ணுகிறார்கள். இதேபோலே, ஒரு சினிமா நடிகை அல்லது தேவை இல்லாத ஒரு ஆபாச போட்டோவை post பண்ணினால் போதும், அது பலரிடத்தில் சென்று அதற்கு எல்லாரும் comment அடிப்பதும், அதை like பன்னுவதுமாக இருகின்றது.

அதிலும் சிலர் வெட்கம் இல்லாமல் சில ஆபாச வார்த்தைகளையும் கூட எழுதுக்கிரார்கள். அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கின்றான்.

“வெட்கக்கேடான செயல், நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)

நமது சகோதரர்கள் இன்றைக்கும் செய்யும் மிகவும் மோசமான ஒரு நாசவேலைதான் பெண்களின் பெயரில் பொய்யான account ஒன்றை திறந்து, அதில் தேவை இல்லாத செய்திகள் ஆபாச படங்களை post பண்ணுகிறார்கள் மற்றும் இந்த மாதிரியான accountகளில் 5000க்கு மேலே நண்பர்கள் இருப்பதை பார்க்கலாம்.

அதிலும் எல்லோருடைய பெயரை பார்த்தாலும் பாத்திமா என்று ஆரம்பிக்கிறது. அதனுடன் ஒரு துணை பெயரும் இருக்கின்றது.

நமது நபி அவர்களின் மகள் பாத்திமாவின் ஒழுக்கமும், சிறந்த நடைமுறையும் நம்மால் இன்றைக்கு கூடுதலான பெண்களிடத்தில் பார்க்க முடியாமல் இருக்கின்றது.

நபி அவர்களின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்த ஒரு சிறந்த பெண்மணி. அதனால்தான் பாத்திமா என்ற பெயரில்கூட ஒரு இனிப்பு இருக்கிறது.

அனால் இன்றைக்கு பாத்திமா என்ற பெயர்தான் facebook இல் தேவை இல்லாத விஷயதிக்கு பயன்படுத்தபடுகிறது. நீங்கள் உண்மையாக இஸ்லாமிய சகோதரர்கள் என்றால் இந்த நாச செயலை இன்றைக்கே நிறுத்துங்கள். நீங்கள் இப்படி செய்வது எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா?

இஸ்லாம் மார்க்கம் ஒழுக்கத்தை சொல்லகூடிய ஒரு சிறந்த மார்க்கம். ஒழுக்கம் என்பது இஸ்லாத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நீங்கள் செய்யும் இந்த நாச செயலானது நமது சமுதாய சகோதரிகளுக்கு கொடுக்கும் அவமானமாகும்.

fb

இன்றைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். இவர்கள் உங்களை பார்த்து விட்டு இஸ்லாத்தை நோக்கி வரவில்லை. அவர்கள் அல் குர்ஆனை படிக்கிறார்கள், பின்னர் இதுதான் சரியான மார்க்கம் என்று தெரிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்.

இப்படி வருபவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள். காரணம், இவர்கள் இந்த மார்க்கத்தின் பெறுமதியை புரிந்து கொண்டு வந்தவர்கள்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு இந்த மார்க்கம் மிகவும் இலகுவாக கிடைத்துவிட்டது. அதனால்தான் இந்த சத்திய மார்க்கத்தின் பெறுமதி நமக்கு புரிய வில்லை. இதனால்தான் நீங்கள் வரம்பு மீறி நடக்கிறீர்கள்.

நீங்கள் செய்யும் இந்த நாசவேலையானது, இந்த மார்க்கத்திக்கு கூட கெட்ட பெயரை கொடுக்கிறது.

அல்லாஹ் வரம்புமீறு வோரை நேசிப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நரக வேதனையை நீங்கள் ருசிக்க விரும்புரீர்களா? நரக நெருப்பு நீங்கள் நினைப்பது போல சாதாரண விசயம் அல்ல. அல்லாஹ் நரகத்தை அல் குர்ஆனில் பல இடங்களில் எப்படி வர்ணிக்கிறான் என்பதை நான் உங்களுக்கு நினவூட்டுகிறேன்.

நமது சமுதாய மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டியது என்ன வென்றால்..
1.இந்த சினிமா நமக்கு எதை போதிக்கின்றது?
2.இவர்களால் நமது சமுதயதிக்கு என்ன இலாபம்?
3.அவர்கள் உங்களுக்கு உலக நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? மார்க்க விசயங்களை போதிக்கிறார்களா?
4.அல்லது அறிவை வளர்ககூடிய நல்ல விசயங்களை போதிக்கிறார்களா?
5.ஒழுக்க விசயங்கலையா உங்களுக்கு போதிக்கிறார்கள்?
6.உங்கள் செல்வங்களான சிறுவர்களுக்கு இதனால் ஏதும் பலனோ அல்லது எதிர்காலம் உண்டா? என்றால் முழுக்க முழுக்க அவை ஒன்றும் கிடையாது.

இவர்கள் காட்டுவது எல்லாம் ஆண்களும் பெண்களும் அறையும் குறையுமாக ஆடை அணிந்து கூத்தடிப்பதைத்தான். மற்றும் படுக்கை அறையை காட்டுகிறார்கள், அல்லது ஒருவன் நூறு பேருக்கு அடிப்பதை காடுகிறார்கள். இப்படிப்பட்ட அசிங்கமான சினிமா காரர்களுக்குதான் இன்றைய சமுதாயத்தில் சிறந்த வரவேற்பு இருக்கிறது.

இவர்களுடைய போடோக்களைதான் facebook இல் கூடுதலாக பார்க்க முடிகிறது. அவர்களுக்கும் நம் முஸ்லிம்களுக்கிடையில் சண்டை வேறு! அது மட்டும் இல்லாமல் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் நடிகர்களின் photo களுக்கு இவள் என் காதலி அது இது என்று, கேவலமான comments வேறு!

விபச்சாரிகளை பார்த்து இப்படி சொல்வதிலும், விபச்சாரிகளின் photo களை profile picture ஆக போட்டுக் கொள்வதிலும் எவ்வளவு பெருமை எம் சமூகத்துக்கு!

நாம் இதிலிருந்து எதை விளங்க வேண்டும்? ஒரு மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்றுதான் ஆடை. இந்த சினிமாகாரர்கள் ஆடையை அறையும் குறையுமாக அணிகிறார்கள்.

இன்னும் சிலர் மிருகங்கங்கள் எப்படி சாலை ஓரங்களில் தமது தேவையை நிறைவேற்றுகிறதோ, அதை விட மிக மோசமான முறையில் ஒரு ஆணுடன் ஒரு பெண் முழுமையாக ஆடைகளை அவிழ்த்து விட்டு உறவாடுவதை காட்டுகிறார்கள்.

இவ்வாரான விபச்சாரத்தில் ஈடுபடுவோரை, திரைப்பட விபச்சாரிகளை நாம் facebook இல் post பன்னுகிறோம்.

நீங்கள் இப்படி post பண்ணும் போது உங்களுடைய சகோதரர்களும் பார்கின்றார்கள், மற்றும் பெண்கள் பார்கின்றார்கள், சிறுவர்கள் பார்கிறார்கள், நல்லவர்கள், படித்தவர்கள், ஒழுக்கமுள்ள பெண்கள் பார்கிறார்கள்.

நீங்கள் மிகவும் இலகுவாக post பண்ணி இருப்பீர்கள். ஆனால், இது எத்தனை பேரினுடைய கைக்கு போகிறது. இதைபார்த்து விட்டு ஒரு பெண் அல்லது ஒரு ஆண் தவறான பாதையில் போனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் ஏற்படும் சகல தீய விசயங்களுக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு சொல்ல வேண்டி இருக்கின்றது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

 

இதைபற்றி நபி அவர்கள் கூறுகையில்,

“யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய நடை முறையை உருவாக்குகிறாரோ, அவருக்கு அதக்குரிய நன்மையும் அவருக்குபின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ, அவருக்கு அதன் பாவமும் அவருக்குபின் அதன்படிசெயல் படுபவர்களின் பாவமும் உண்டு அவர்களின் பாவத்திலிரிந்து எதுவும் குறைத்து விடாது” (அறிவிப்பவர்: ஜாரீர் பின்அப்துல்லாஹ் (ரலி), நூல் முஸ்லிம்: 1848)

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!

நடந்த தவறுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள். நேர்வழியை தேடுங்கள். அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான்.

குறிப்பு: இக்கட்டுரை உங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் சேர்த்துத்தான் எழுதியுள்ளேன். கருத்துக்களில் உண்மையிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அல்லது பிழைகள் இருப்பின் பகிரங்கமாக சுட்டிக்காட்டலாம். திருத்தி கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *