இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு நேற்று (26/03/2015) அன்று ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் 40 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் ஏற்றுமதியில் நிறுவனங்கள் எதிரநோக்கும் பல பிரச்சினைகளை முன்வைத்தனர். அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக சம்மந்தப்பட்ட சகல திணைக்களம், அமைச்சுக்களின் பிரதாணிகளும் கலந்துகொண்டதுடன் ஏற்றுமதியாளர்களின் சுமார் 50க்கு மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுவழங்கப்பட்டது. இதில் ஏற்றுமதி அதிகார சபை தலைவர் உற்பட பலர் கலந்து கலந்துகொண்டனர்.