Breaking
Tue. May 21st, 2024

இரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­களில் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. எனவே, தோட்டத் தொழி­லா­ளர்கள் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்­பு­ணர்­வு­களைப் பெற்றுக் கொள்­வது கட்­டா­ய­மா­கு­மென இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையின் பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்­திய கலா­நிதி காஞ்­சன உப­சேன கூறினார்.

இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையில் அண்­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போது இதனைத் தெரி­வித்தார்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் வெளி­நாட்டு பயணம் மேற்­கொள்­கின்­றனர். குறிப்­பாக பணிப்­பெண்­க­ளாக வியா­பார நோக்­கத்­துக்கு மத்­திய கிழக்கு மற்றும் மட­கஸ்கார் போன்ற நாடு­க­ளுக்குச் செல்­கின்­றனர். அத்­துடன் வெளி­நாடு சென்ற பின் அவர்­களின் துணை­வர்­க­ளி­டையே நடத்தை பிறழ்­வுகள் காணப்­ப­டு­கின்­றன. இதனால், இரத்­தி­ன­பு­ரியில் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

தோட்டப் பகுதி பெண்­களும் கூடு­த­லாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்குச் செல்­வ­தனால் அப்­ப­கு­தியில் எயிட்ஸ் பரவும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால், இம்­மா­வட்­டத்தில் எயிட்ஸ் நோயா­ளி­களின் விப­ரங்­களை முறை­யாக கூற முடி­யா­துள்­ளது. இதனால், இரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­க­ளிலும் எயிட்ஸ் நோய் தொற்­றுள்­ள­வர்கள் காணப்­ப­டு­கின்­றனர்.

இவர்கள் முறை­யாக சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு வரு­வ­தில்லை. எயிட்ஸ் நோயைக் கட்­டுப்­ப­டுத்த தற்­போது மருந்­துகள் காணப்­ப­டு­கின்­றன. நோய் தொற்­றி­ய­வர்கள் முறை­யாக சிகிச்சை பெற்றுக் கொண்டால் அவர்­களும் சாதா­ரண மனி­தர்கள் போல் வாழலாம்.

இரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டங்­களில் எயிட்ஸ் நோய் குறித்த விழிப்­பு­ணர்வுக் கூட்­டங்­களை நடத்த முற்­படும்போது தொழி­லா­ளர்கள் பின்­வாங்­கு­கின்­றனர். இதனால், எயிட்ஸ் நோய் குறித்த விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்த முடி­யா­துள்­ளது.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்­றுள்­ள­வர்கள் காணப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­ட­போதும் சுமார் 300 பேர் மட்­டுமே முறை­யாக சிகிச்சை பெறு­கின்­றனர். இதனால், இம் மாவட்­டத்தில் எயிட்ஸ் நோயா­ளி­களின் விப­ரங்­களை முறை­யாகக் கூற முடி­யா­துள்­ளது.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 16 – 24 வய­திற்­கிடை யிலுள்­ள­வர்­க­ளி­டையே எயிட்ஸ் நோய் தொற்று குறிப்­பாக எச்.ஐ.வி. தொற்று காணப்­ப­டு­கின்­றது. இதனால், பாட­சாலை மட்­டங்­களில் எயிட்ஸ் நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று குறித்து விளக்­க­ம­ளிக்­கப்­ப­டு­கின்­றது. மேலும், பாட­சாலை பாடத்­திட்­டங்­களில் குறிப்­பிட்­ட­ளவு அடிப்­படை பாலியல் சம்­பந்­த­மான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

அநே­க­மான ஆசி­ரி­யர்கள் இந்த விட­யங்­களை கற்­பிக்க முயற்சி செய்­வ­தில்லை. அதனைத் தவிர்த்து விடு­கின்­றனர். இதனால், பெரும்­பா­லான மாண­வர்கள் பாலியல் சம்­பந்­த­மான வினாக்­க­ளுக்கு விடை­ய­ளிப்­ப­தில்லை. இவ்­வா­றான சூழ்­நி­லையில் மாண­வர்­களின் அடிப்­படை பாலியல் அறிவு குறை­வாகக் காணப்­ப­டு­கின்­றது.

இந்த அறி­வினை முறை­யாக பெற்றால் மாண­வர்கள் தவ­றான வழியில் செல்­வது தவிர்க்­கப்­படும்.
எயிட்ஸ் மற்றும் அனைத்து பாலியல் நோய்­க­ளுக்கும் சிகிச்­சைகள் இல­வ­ச­மாக இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­ப­டு­கின்­றன. எனவே, எயிட்ஸ் நோய் தொற்­றினால் எவ்­வித அச்­ச­மு­மின்றி சிகிச்­சையைப் பெற்றுக் கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்கின்றேன். இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெறாவிட்டால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கர்ப்பிணி மார்களுக்கும் எயிட்ஸ் நோய் இருக்கின்றதா? என்பது குறித்து இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அநேகமான கர்ப்பிணிப் பெண்கள் எயிட்ஸ் நோயற்றவர்களாகவே உள்ளனர் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *