Breaking
Sun. May 5th, 2024

மினு­வாங்­கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

நகைக்­க­டையின் உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்று விட்டு பெருந்தொகை­யான நகை­களை கொள்­ளை­யர்கள் கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தா­கவும் இதன் போது கொள்­ளை­யர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி கடையின் சேவை­யாளர் ஒருவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

கொள்­ளை­யர்கள் நால்வர் இந்த கொள்­ளைக்­காக இரு மோட்டார் சைக்­கிள்­களில் வந்­துள்­ளமை ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் சம்­ப­வ­மா­னது கடையின் சீ.சீ.ரி.வி.கண்­கா­ணிப்பு கம­ராவில் துல்லி­ய­மாக பதி­வா­கி­யுள்ள நிலையில் சந்­தேக நபர்­களை கண்­டு­பி­டிக்க விஷேட பொலிஸ் குழு­வொன்று கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

சம்­ப­வத்தில் கடையின் உரி­மை­யா­ள­ரான 48 வய­து­டைய, மினு­வாங்­கொடை, கல்­லொ­லுவ எனும் முக­வ­ரியைச் சேர்ந்த மொஹிதீன் என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்ளார். கொள்­ளை­யர்கள் கொள்­ளை­யிட்ட நகை­மற்றும் பணத்தின் பெறு­மதி நேற்று நள்­ளி­ரவு வரை கணக்­கி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,

மினு­வாங்­கொடை பழைய சந்தை கட்­டிடத் தொகு­தியில் கீழ் மடியில் மொஹிதீன் தங்க நகை விற்­பனை நிலையம் எனும் பெயரில் வர்த்­தக நிலையம் ஒன்று இருந்­துள்­ளது. குறித்த நகைக்­க­டைக்கு நேற்று மாலை 6.45 மணிக்கு இரு மோட்டார் சைக்­கிள்­களில் நால்வர் வந்­துள்­ளனர். அவர்­களில் இருவர் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் அணிந்­தி­ருந்­துள்­ள­துடன் ஏனைய இரு­வரும் தமது முகத்தை துணியால் சுற்றி மறைத்த வண்ணம் இருந்­துள்­ளனர்.

திடீ­ரென கடைக்குள் புகுந்த இவர்கள் ரீ 56 ரக துப்­பாக்­கியைக் காட்டி அச்­சு­றுத்தி கடையில் உள்ள நகை­க­ளையும் பணத்­தி­னையும் கொள்­ளை­யிட ஆரம்­பித்­துள்­ளனர். இதன் போது கடையின் உரி­மை­யா­ள­ரான மொஹிதீன் என்­ப­வரும் கடையின் சேவை­யா­ளர்­க­ளான மேலும் மூவரும் நோன்பு திறந்த வண்ணம் இருந்­துள்­ளனர்.

கொள்­ளை­யர்கள் இவ்­வாறு திடீ­ரென புகுந்து கொள்­ளை­ய­டிப்­பதை பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது கொள்­ளை­யர்­களில் ஒரு­வரை உரி­மை­யாளர் மொஹிதீன் பாய்ந்து பிடிக்க முற்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து கொள்­ளை­யர்­களில் ஒருவர் சர­ாம­ரி­யான துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­துள்ளார்.

இதனால் கடையின் உரி­மை­யா­ளரும் பிறிதொரு சேவை­யா­ளரும் கடு­மை­யான காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். உடன் கொள்­ளை­யிட்ட நகைகள் பணத்­துடன் கொள்­ளை­யர்கள் மினு­வாங்­கொடை கொழும்பு வீதி­யூ­டாக தப்பிச் சென்­றுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து காய­ம­டைந்த இரு­வரும் மினு­வாங்­கொடை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் மொஹிதீன் உயிரிழந்திருந்ததாக மினுவாங்கொடை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்த கடையின் சேவையாளர் தொடர்ந்தும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் விஷேட பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.

vk

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *