உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக யாழிலும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் கைதடி விழிப்புலன் இழந்தோர் சங்கத்தில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
1969 ஆம் ஆண்டில் உலக வெள்ளை பிரம்பு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 45 ஆவது முறையாக இந்த வெள்ளைப் பிரம்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.