அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம் 25 வருடங்களுக்குப்பின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று பள்ளிவாசல் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
பள்ளிவாசல் தலைவர் முஹமட் ஜவாஹிரீடம் அமைச்சர் விமல் வீரவன்சவினால் உறுதிப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, கெழும்பு மாநகர சபை உறுப்பிணர் முஹம்மட் முசம்மில் ஆகியோறும் கலந்த கொண்டனர்.
நேற்று இவ் வீடமைப்புத்திட்டம் 32 வருடங்களின் பின் 13.5 மில்லியன் ருபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.