தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது எரிபொருட்களின் விலைகளை குறைத்திருக்கிறது.இந்த புதிய விலைகள் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்பது கேள்விக்குறியே என அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.