Breaking
Sun. May 19th, 2024
தங்கொட்டுவ பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஐந்து பேருடன் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் தொடர்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவ – புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியில் எரிந்த நிலையில் இருந்த வான் தொடர்பாக 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வானிற்குள் இருந்து 5 சடலங்களையும் மீட்டிருந்தன.
குறித்த சம்பவத்திற்கு பணம் கப்பம் பெறுதலும் ஒரு காரணமென பொலிஸார் நம்புவதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதாகவும் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *