Breaking
Fri. May 17th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அனுசரணையோடு காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எல்லோராலும் உணரப்பட்டதன் நோக்காகக் கொண்டு புதிய வர்த்தக சங்கம் அமைப்பது தொடர்பான முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு 06-05-2016 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி-01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் றஊப் ஏ மஜீத் ஜேபி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *