Breaking
Tue. May 14th, 2024

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீவிபத்து சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம்இடம்பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்தது தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத்தீயினால் பல வார்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநோயாளர் பிரிவு எரிந்துள்ளதால் நோயாளிகளுக்கு தேவையானசிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குருநாகல்வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சந்தன கந்தன்கம தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *