Breaking
Sat. May 11th, 2024

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது விஜயம் நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்களுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை முழுமையாக குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனினும் சர்வதேச அழுத்தங்களை பலப்படுத்தி நாட்டில் தொடர்ந்தும் குழப்பகர சூழல் ஒன்றை ஏற்படுத்தவும் ஒரு சாரார் முயற்சித்து வருகின்றனர். தற்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான வருகையும் கூட தமது பக்கம் சார்பாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இவர்களது முயற்சிகள் அரசாங்கத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்காது. அதேபோல் தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு வருகின்றமை இலங்கைக்கு சாதகமாக அமையும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *