Breaking
Fri. May 17th, 2024

இலங்கை வரும் ஐக்­கிய நாடுகளின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆறு வரு­டங்­களில் வடக்கு கிழக்கு உட்­பட நாட­ள­ாவிய ரீதியில் மேற்­கொண்­டுள்ள அபி­வி­ருத்தி பணி­க­ளையும் கருத்தில் கொள்­ள ­வேண்டும் என்று அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்­வரும் 31ஆம் திகதி உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை தர­வுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் இரண்­டா­வது தட­வை­யாக தற்­போது இலங்­கைக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்ளார். 2009ஆம் ஆண்டு 22 ஆம் திகதி இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த பான் கீ மூன் அப்­போது யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருந்­தி­ருக்­க­வில்லை. வவு­னி­யாவில் இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­கி­யி­ருந்த மக்­களை பார்­வை­யிட்டுச் சென்­றி­ருந்தார்.

அதன் பின்னர் ஆறு வரு­டங்­களில் அப்­போ­தைய அர­சாங்கம் இம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்றம், வாழ்­வாதார மேம்­பாடு போன்­ற­வி­ட­யங்­களில் அதீத கவனம் எடுத்­தி­ருந்­தது. அத்­தோடு கொடிய யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­தி­யிலும் கவனம் செலுத்­தி­யது. வீதிகள், பாட­சா­லைகள், அரச திணை­க்க­ளங்கள், நிறு­வ­னங்­களின் மீள் நிர்­மாணத்­திற்கு பாரி­ய­ளவில் செல­வினங்­களை செய்­தது.

ஒரு சமூகம் அன்­றாட வாழ்க்­கையை சுமு­க­மாக கொண்டு செல்­வ­தற்கு இய­லாத சூழலில் நாம் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தென்­பது பய­னற்­ற­வி­ட­ய­மாகும். ஆகவே தான் நாம் முதலில் அபி­வி­ருத்­தி­களின் ஊடாக வடக்கு மாகா­ணத்தின் உட்­கட்­ட­மைப்பு, வட மக்­களின் வாழ்­வா­தாரம் ஆகி­ய­வற்றை ஏனைய மாகா­ணங்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் நிக­ராக முன்­னேற்­று­வது என்ற கரு­து­கோளை முன்­னி­லைப்­ப­டுத்தி எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தோம்.

ஜன­வரி எட்டாம் திகதி மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு எதி­ராக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களை திசை­தி­ருப்பி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திக் ­கொண்­டார்கள். புதிய அர­சாங்கம் உரு­வாகி ஒன்­றரை ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. வடக்கு கிழக்கில் எவ்­வி­த­மான முன்­னேற்­ற­க­ர­மான செயற்­றிட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களை நிறைவு செய்­து­விட்டு தேசிய நல்­லி­ணக்கம் சக­வாழ்வு என பேச்­ச­ளவில் மட்டும் கதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால் இனங்­க­ளுக்­கி­டையில் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது என்­பதே யதார்த்­த­மான விட­ய­மாகும். எவ்­வா­றா­யினும் தற்­போது தேசிய நல்­லி­ணக்கம், சக­வாழ்வு தொடர்­பி­லான நிலை­மை­களை அவ­தா­னிப்­ப­தற்­காக வரு­கை ­தரும் ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொடிய யுத்தம் நடைபெற்ற இடங்களில் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான ஆறு ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக் ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *