கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.