Breaking
Mon. May 20th, 2024

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடைப் பெண்­களின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தக பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குற்றச் செய­லொன்­றுடன் தொடர்­பு­பட்­டது அல்ல என பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

சீருடை மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­ன மாண­வியின் பாட்­டி­யினால் மாண­வியின் வீட்டில் ஒப்­ப­டைக்­கு­மாறு கொடுத்து அனுப்­ பப்பட்­டது என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன தைத் தொடர்ந்து கைதான 23 வய­து­டைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நேற்று முன்தினம் கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடை, பெண்­க ளின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒரு­வரை பொது மக்கள் பிடித்து தாக்­கு­வ­தாக புசல்­லாவ பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த இளை­ஞனை கைது செய்தனர்.

இதன்­போது முச்­சக்­கர வண்­டி­யுடன் கை தான சந்­தேக நபர் 23 வய­து­டை­யவர் என வும் கட்­டுக்­கித்­துலை பிர­தே­சத்தை சேர்ந் தவர் எனவும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர். அத னைத் தொடர்ந்து பாட­சாலை சீரு­டை கள் மற்றும் புத்­த­கப் பை, உள்­ளா­டைகள் தொடர்பில் விசா­ரணை செய்­து ள்­ளனர்.

இதன்­போதே உண்மை தெரி­ய­வந்­துள் ­ளது. சீருடை மற்றும் புத்­தகப் பைக்கு சொந்­த­ மான மாண­வியின் பாட்டி வீடு பாட­சா­லைக்கு அருகில் உள்ள நிலையில், குறித்த மாணவி பாட்டி வீட்­டுக்கு சென்­று­விட்டு உடை­களை மாற்­றிய பின்னர் தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார். இதன்­போது அவர் சீரு­டை­க­ளையும் புத்­தகப் பையி­னையும் அங்­கேயே வைத்­து­விட்டு சென்­றுள்ளார். மறு நாள் அவர் பாட­சாலை செல்ல வேண்டும் என்­ப­தற்­காக பாட்டி, அவற்றை குறித்த முச்­சக்­கர வண்டி சார­தி­யிடம் கொடுத்து மாண­வியின் வீட்டில் கொடுக்­கு­மாறு கொடுத்­த­னு ப்­பி­யுள்ளார்.

இதனை பாட்டி, மாணவி மற்றும் சந்­தேக நபர் உள்­ளிட்ட பலரின் வாக்கு மூலங்கள் ஊடாக பொலிஸார் உறுதி செய்­துள்­ளனர்.

இந் நிலையில், முச்­சக்­கர வண்­டியில் இருந்த உள்­ளா­டைகள் தொடர்பில் விசா­ரணை நடத்­திய பொலிஸார், குறித்த இளை­ஞ­னுக்கு பெண்­களின் உள்­ளா­டை­களை சேர் க்கும் ஒரு வகை மான­சீக பிரச்­சினை உள்­ளதைக் கண்­ட­றிந்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து நேற்று சந்­தேக நபரை மன்றில் ஆஜர்­ப­டுத்­திய பொலிஸார் விசா­ரணை அறிக்­கை­யையும் மன்­றுக்கு சமர்­ப்பித் ­தனர். விசா­ர­ணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்­ப்பித்த பொலிஸார் அந்த இளை­ஞ னை மனநல வைத்­தியர் ஒரு­வ­ரிடம் சிகிச்­சை­க­ளுக்­காக அனுப்­பு­மாறு கோரினார்.

எனினும் இதன்­போது மன்றில் இளை­ஞ னின் உற­வி­னர்கள் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலை யில், பொலி­ஸாரின் கோரிக்கையை நிரா­க ரித்த நீதிவான் இளை­ஞனை உறவி­னர்­க­ளிடம் ஒப்ப­டைத்­த­துடன், அவர்கள் மன நல மருத்துவர் ஒருவரை நாடலாம் என ஆலோசனை வழங்கினார் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *