Breaking
Wed. May 8th, 2024
– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
வந்தாரை வாழ வைத்த ஊர் புத்தளம் 25 வருடங்களாக வடக்கு மக்கள் இரண்டரக் கலந்த புத்தளம் மண்ணில் இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புத்தளம் பெரிய  பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள 1400 மினாரா கோபுரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்து விசேட செட்டின் கீழ் புத்தளம் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர்.
மறிச்சுகட்டி தொடர்பில் புத்தளம் மக்களுக்கு புதிய கதைகளை பெரும் பான்மையினர் கூறுகின்றனர்.ஆனால் வில்பத்து அமைந்திருப்பது புத்தளம் எல்லையில்,ஆனால் மீள்குடியேற்றம் இடம் பெறுவது மன்னார் மறிச்சுக்கட்டி மக்கள் வாழ்ந்த பாரம்பரிய மண்ணில் என்பதை உறக்கச் சொல்வோம்.
ஜனாதிபதியே…இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக மேற்கொள்ளுங்கள்,அதற்கு இதோ எமது கையொப்பங்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *