Breaking
Thu. May 16th, 2024

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஆஸ்த்திரியா ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட முன்னணி அரச பிரதிநிதிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார்.

சிறந்த சமூக, சந்தைப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *